செய்திகள் :

மீண்டும் கேங்ஸ்டர் படத்தை இயக்கும் வெற்றி மாறன்? நாயகன் இவரா?

post image

இயக்குநர் வெற்றி மாறன் கேங்ஸ்டர் கதையைத் திரைப்படமாக எடுக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலை 1 & 2 படங்களைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றி மாறன் நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கான அறிவிப்புகளும் முறையாக வெளியானதுடன் ஜூன் மாதம் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இன்னும் விஎஃப் எக்ஸ் பணிகள் முடியாததால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் படத்தின் தயாரிப்பாளர் தாணு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இதற்கிடையே இயக்குநர் வெற்றி மாறன் வடசென்னையைப் பின்னணியாக வைத்து கேங்ஸ்டர் திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும் இதில் நாயகனாக நடிகர் சிம்பு நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனுஷ் நடித்த வடசென்னை திரைப்படத்தில் அவரின் கதாபாத்திரம் முதலில் சிம்புவுக்காக எழுதப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ரசிகர்களைக் கவரும் சூர்யா - 46 தோற்றம்!

அஜ்மல் மீது பாலியல் குற்றச்சாட்டு!

பிரபல நடிகர் அஜ்மல் மீது நடிகையொருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நடிகர் அஜ்மல் ‘அஞ்சாதே' படத்தின் மூலம் தன் நல்ல நடிப்பால் ரசிகர்களிடம் கவனம்பெற்றவர். தொடர்ந்து, கோ, வெற்றிச்செல்வன், நெற்... மேலும் பார்க்க

கண்மணி - அஷ்வத் தம்பதிக்கு குழந்தை பிறந்தது!

சின்ன திரை பிரபலங்களான கண்மணி மனோகரன் - அஷ்வத் தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரில் அஞ்சலி என்ற பாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனங்களைக் கவர்ந... மேலும் பார்க்க

3.15 மணிநேர கால அளவு கொண்ட குபேரா!

தனுஷின் குபேரா திரைப்படத்திற்குத் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கியுள்ளது. நடிகர் தனுஷின் 51-வது படத்தை சேகர் கமூலா இயக்கியுள்ளார். இதில் நாகார்ஜுனா பிரதான பாத்திரத்திலும் ராஷ்மிகா நாயகியாகவும் நடித்த... மேலும் பார்க்க

ரசிகர்களைக் கவரும் சூர்யா - 46 தோற்றம்!

நடிகர் சூர்யாவின் புதிய தோற்றம் ரசிகர்களிடம் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சூர்யா தன் 46-வது படத்தில் நடிக்கிறார். இப்படத்தை வாத்தி, லக்கி பாஸ்கர் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் வெங்கட் அட்லுரி இ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றத்தில் பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!

வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திங்கள் கிழமை பால்குடம் எடுத்து நேர்த்திக்கடனைச் செலுத்தினர். ஸ்ரீ முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோயிலில... மேலும் பார்க்க

விராலிமலை முருகன் கோயிலில் வைகாசி தேரோட்டம்!

விராலிமலை முருகன் கோயில் நடைபெற்ற வைகாசி தேரோட்டத் திருவிழாவில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற... மேலும் பார்க்க