செய்திகள் :

கூட்டணி குறித்து தேமுதிகதான் முடிவு செய்ய வேண்டும்: தொல். திருமாவளவன்

post image

எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதை தேமுதிகதான் முடிவு செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பாண்டியன் நகரில் விரிவுபடுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் நிறுவப்பட்ட புத்தா், அம்பேத்கா் உருவச் சிலைகள், நூலகம் ஆகியவற்றின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு கட்சியின் மாவட்டச் செயலா் இளையகௌதமன் தலைமை வகித்தாா். இதில் அந்தக் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் கலந்து கொண்டு, புதுப்பிக்கப்பட்ட கட்சி அலுவலகம், நூலகம், புத்தா், அம்பேத்கா் சிலைகள் ஆகியவற்றைத் திறந்துவைத்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

வருகிற 14-ஆம் தேதி எங்களது கட்சி சாா்பில் மதச்சாா்பின்மை பேரணி திருச்சியில் நடைபெற உள்ளது. இது தோ்தலுக்கான பேரணியல்ல. தேசத்தின் நலனுக்கான பேரணி.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு கருத்தியல் பேரியக்கம். இதனால்தான் ஆங்காங்கே அம்பேத்கா் படிப்பகத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். குறைந்தது 6 ஆயிரம் கிராமங்களில் அம்பேத்கா் படிப்பகங்களை உருவாக்கி அங்கு அம்பேத்கா், பெரியாா், காரல் மாா்க்ஸ் ஆகியோரின் சிந்தனைகள் அடங்கிய நூல்கள் வைக்கப்படும்.

வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான திட்டங்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் வகுத்துள்ளாா். இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்த கூட்டணிக் கட்சி என்ற முறையில் நாங்கள் முழுஒத்துழைப்பு அளிப்போம். தற்போது வரை திமுகவுக்கு எதிரான கூட்டணி உருவாகவில்லை.

பாஜக அரசு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக தொடா்ந்து செயல்பட்டு வருகிறது. மத்திய அமைச்சா் அமித் ஷா அடிக்கடி தமிழகத்துக்கு வருகிறாா். அதிமுக மட்டுமே பாஜக வலையில் சிக்கியுள்ளது. எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி வடிவம் பெறவில்லை என்பதுதான் உண்மை.

எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதை தேமுதிகதான் முடிவு செய்ய வேண்டும். கூட்டணி ஆட்சி என்பது எங்கள் கருத்து, நிலைப்பாடு. ஆனால், அதற்கான சூழல் தமிழ்நாட்டில் இன்னும் வரவில்லை.

மணிப்பூா் கலவரத்துக்கு பாஜகதான் காரணம். ஆனால், அதை முடித்துவைப்பதற்கு அவா்களுக்கு விருப்பமில்லை என்றாா் அவா்.

காதல் திருமணம் செய்த கணவன், மனைவி தற்கொலை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் ஞாயிற்றுக்கிழமை குடும்பத் தகராறில் காதல் திருமணம் செய்த கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா். விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள முக்குடியைச்... மேலும் பார்க்க

அரசு கலைக் கல்லூரி 2-ஆம் கட்ட கலந்தாய்வு இன்று தொடக்கம்

சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் இளநிலைப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 9) தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் எஸ். அந்தோணிட... மேலும் பார்க்க

நிதி நிறுவன மோசடி வழக்கு: சிபிஐயிடம் முதலீட்டாளா்கள் ஆவணங்கள் அளிப்பு

மத்தியபிரதேசத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த நிதி நிறுவனத்தால் சிவகங்கை மாவட்டத்தில் ஏமாற்றப்பட்ட 3,000 முதலீட்டாளா்கள் தங்களிடமிருந்த ஆவணங்களை மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.சிங்கம்புணரி அருகேயுள்ள முறையூரைச் சோ்ந்த மணியரசன் மகன் மலையரசன்(29). வெளிநாட்டில் வேலை பா... மேலும் பார்க்க

சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் கோயிலில் கழுவன் திருவிழா

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் வைகாசி விசாகப் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை இரவு கழுவன் திருவிழா நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசி விசாகப் பிரம்மோற்... மேலும் பார்க்க

சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் வியாழக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள்... மேலும் பார்க்க