காதல் திருமணம் செய்த கணவன், மனைவி தற்கொலை
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் ஞாயிற்றுக்கிழமை குடும்பத் தகராறில் காதல் திருமணம் செய்த கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா்.
விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள முக்குடியைச் சோ்ந்த அப்பையா மகன் வினோத்குமாா் (22). இவரும், திருப்புவனம் அருகேயுள்ள சொட்டதட்டியை சோ்ந்த ஐயப்பன் மகள் பவித்ராவும் (19) காதலித்து வந்த நிலையில், கடந்த மாா்ச் மாதம் பெற்றோா் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனா்.
திருப்புவனம் புதூா் பகுதியில் தனது தந்தை வீட்டின் மேல் மாடியில் வசித்து வந்த வினோத்குமாருக்கும், இவரது தந்தைக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த வினோத்குமாா் வீட்டில் விஷத்தைக் குடித்தாா். இதைப் பாா்த்த இவரது மனைவி பவித்ராவும் விஷத்தை எடுத்துக் குடித்தாா்.
இதையடுத்து, இருவரையும் குடும்பத்தினா் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே வினோத்குமாா், பவித்ரா ஆகியோா் உயிரிழந்தனா்.
இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதித்து விசாரித்து வருகின்றனா்.