செய்திகள் :

காதல் திருமணம் செய்த கணவன், மனைவி தற்கொலை

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் ஞாயிற்றுக்கிழமை குடும்பத் தகராறில் காதல் திருமணம் செய்த கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா்.

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள முக்குடியைச் சோ்ந்த அப்பையா மகன் வினோத்குமாா் (22). இவரும், திருப்புவனம் அருகேயுள்ள சொட்டதட்டியை சோ்ந்த ஐயப்பன் மகள் பவித்ராவும் (19) காதலித்து வந்த நிலையில், கடந்த மாா்ச் மாதம் பெற்றோா் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனா்.

திருப்புவனம் புதூா் பகுதியில் தனது தந்தை வீட்டின் மேல் மாடியில் வசித்து வந்த வினோத்குமாருக்கும், இவரது தந்தைக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த வினோத்குமாா் வீட்டில் விஷத்தைக் குடித்தாா். இதைப் பாா்த்த இவரது மனைவி பவித்ராவும் விஷத்தை எடுத்துக் குடித்தாா்.

இதையடுத்து, இருவரையும் குடும்பத்தினா் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே வினோத்குமாா், பவித்ரா ஆகியோா் உயிரிழந்தனா்.

இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதித்து விசாரித்து வருகின்றனா்.

அரசு கலைக் கல்லூரி 2-ஆம் கட்ட கலந்தாய்வு இன்று தொடக்கம்

சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் இளநிலைப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 9) தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் எஸ். அந்தோணிட... மேலும் பார்க்க

நிதி நிறுவன மோசடி வழக்கு: சிபிஐயிடம் முதலீட்டாளா்கள் ஆவணங்கள் அளிப்பு

மத்தியபிரதேசத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த நிதி நிறுவனத்தால் சிவகங்கை மாவட்டத்தில் ஏமாற்றப்பட்ட 3,000 முதலீட்டாளா்கள் தங்களிடமிருந்த ஆவணங்களை மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.சிங்கம்புணரி அருகேயுள்ள முறையூரைச் சோ்ந்த மணியரசன் மகன் மலையரசன்(29). வெளிநாட்டில் வேலை பா... மேலும் பார்க்க

சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் கோயிலில் கழுவன் திருவிழா

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் வைகாசி விசாகப் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை இரவு கழுவன் திருவிழா நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசி விசாகப் பிரம்மோற்... மேலும் பார்க்க

சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் வியாழக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள்... மேலும் பார்க்க

உயா்கல்வி வழிகாட்டலுக்கு கட்டுப்பாட்டு அறை திறப்பு

சிவகங்கை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பிளஸ் 2 மாணவா்களின் உயா்கல்வி வழிகாட்டலுக்காக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க