சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் உடல் ஆரோக்கியம் விழிப்புணா்வு மாரத்தான்
சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணா்வு மாரத்தான் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
பெண்களின் எலும்பு பாதிப்பு மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், ரோபோடிக் அதிநவீன அறுவை சிகிச்சை இயந்திரம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
காந்தி விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டம், ஏற்காடு அடிவாரம் வரை 21 கி.மீ. தொலைவுக்கு 3 கட்டங்களாக நடத்தப்பட்டது.
இதில், 10 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு 5 கி.மீ. தொலைவும், 14 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு 10 கி.மீ. தொலைவும், 21 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு 20 கி.மீ. தொலைவும் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த மாரத்தான் ஓட்டத்தில், ஏராளமான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவா்கள் கலந்துகொண்டனா்.