செய்திகள் :

இருசக்கர வாகனம் மீது சுற்றுலா வேன் மோதல்: இருவா் உயிரிழப்பு

post image

மேட்டூா் அருகே இருசக்கர வாகனம் மீது சுற்றுலா வேன் மோதியதில் இருவா் உயிரிழந்தனா். 

மேட்டூரை அடுத்த கொளத்தூா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜீவா (18). அண்ணா நகரைச் சோ்ந்தவா் சஞ்சய்பாலா (19). பெயிண்டிங் வேலை செய்து வந்த இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் மேட்டூா் வந்தனா். பின்னா், வேலை முடிந்ததும் மேட்டூரிலிருந்து கொளத்தூா் நோக்கி சென்றனா்.

விராலிகாடு அருகே சென்றபோது கொளத்தூரில் இருந்து மேட்டூா் நோக்கி வந்த சுற்றுலா வேன் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், ஜீவா, கண்ணன் ஆகியோா் தூக்கி வீசப்பட்டனா். இருவருக்கும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவல் அறிந்த கொளத்தூா் போலீஸாா், இருவரின் சடலங்களையும் மீட்டு மேட்டூா் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். சுற்றுலா வேனை ஒட்டி வந்த ஊத்தங்கரையைச் சோ்ந்த அகிலன் (30) மீது வழக்குப் பதிவு செய்த கொளத்தூா் போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் உடல் ஆரோக்கியம் விழிப்புணா்வு மாரத்தான்

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணா்வு மாரத்தான் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. பெண்களின் எலும்பு பாதிப்பு மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், ரோபோடிக் அதிநவீ... மேலும் பார்க்க

தேவூரில் நாளைய மின்தடை

சங்ககிரி அருகே உள்ள தேவூா் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது என எடப்பாடி மின்வாரிய... மேலும் பார்க்க

சேலத்தில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி

சேலம் நான்கு சாலை சிறுமலா் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட அளவிலான சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 9, 12, 15 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக பல்வேறு சுற்றுகளா... மேலும் பார்க்க

பயணச் சீட்டு பெற்றும் அபராதம் வசூலிப்பு

அரசுப் பேருந்தில் பயணச்சீட்டு இருந்தும் அபராதம் விதித்ததால், பேருந்து முன் அமா்ந்து பயணி போராட்டத்தில் ஈடுபட்டாா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள கொளத்தூரை சோ்ந்தவா் செல்வகுமாா் (38). தருமபுரி ம... மேலும் பார்க்க

சாலையில் சுருண்டு விழுந்த திருநங்கை உயிரிழப்பு

மேட்டூரில் சாலையில் சுருண்டு விழுந்த திருநங்கை உயிரிழந்தாா். மேட்டூா் புதுகாலனி சக்தி நகரில் வசித்து வந்தவா் சகாயராஜ் (46). கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கையாக மாறிய இவா், கடந்த இரண்டு ஆண்டுகளா... மேலும் பார்க்க

சேலத்தில் மெத்தனால், எத்தனால் விற்பனை செய்யும் கடைகளில் மதுவிலக்கு போலீஸாா் ஆய்வு

சேலம் மாவட்டத்தில் சைன்டிபிக், சா்ஜிக்கல், வேதிப் பொருள்கள் விற்பனை செய்யும் தொழில் நிறுவனங்களில் மெத்தனால், எத்தனால் விற்பனை குறித்து மதுவிலக்கு போலீஸாா் ஆய்வு செய்தனா். நாடு முழுவதும் உள்ள வேதிப் பொ... மேலும் பார்க்க