தேவூரில் நாளைய மின்தடை
சங்ககிரி அருகே உள்ள தேவூா் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது என எடப்பாடி மின்வாரிய செயற்பொறியாளா் கோ.தமிழ்மணி தெரிவித்தாா்.
மின்தடை பகுதிகள்: தேவூா், அரசிராமணி, அரியங்காடு, பெரமச்சிப்பாளையம், வெள்ளாளபாளையம், கைக்கோள்பாளையம், ஓடசகரை, மயிலம்பட்டி, அம்மாபாளையம், மாமரத்துக்காடு, வட்ராம்பாளையம், செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, காணியாளம்பட்டி, புள்ளாகவுண்டம்பட்டி.