செய்திகள் :

மும்பை புறநகர் ரயிலில் நெரிசல்: தவறி விழுந்த 5 பேர் பலி!

post image

மும்பை புறநகர் ரயிலில் கூட்ட நெரிசல் காரணமாக ரயிலில் இருந்து தவறி விழுந்த 5 பேர் பலியாகியுள்ளதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்த 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

மகாரஷ்டிர மாநிலத்தில் மும்பைக்கு இயக்கப்படும் புறநகர் ரயில்களில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயணிக்கும் நிலையில், காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டநெரிசல் ஏற்படுவது வழக்கம்.

இந்த நிலையில், இன்று காலை தாணே ரயில் நிலையத்தில் இருந்து மும்பை ரயில் நிலையத்துக்கு புறநகர் ரயில் சென்றுகொண்டிருந்தது.

அதிக கூட்டம் காரணமாக ரயிலில் படிக்கட்டுகளில் அதிகளவிலான பயணிகள் தொங்கியபடி பயணித்துள்ளனர்.

தாணேவை அடுத்த மும்ப்ரா ரயில் நிலையம் அருகே புறநகர் ரயில் சென்றுகொண்டிருந்தபோது, படிக்கட்டுகளில் தொங்கிய 10-க்கும் மேற்பட்டோர் தவறி கீழே விழுந்துள்ளனர்.

அதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், காயமடைந்தவர்களை ரயில்வே காவலர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இதுதொடர்பாக மும்பை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தாணே - மும்பை புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : கடந்த 11 ஆண்டுகள் நேர்மறை மாற்றங்களை விளைவித்துள்ளது: பிரதமர் மோடி

ஜனநாயகம், பொருளாதாரம், சமூகக் கட்டமைப்புக்கு மோடி அரசால் சேதம்: கார்கே

கடந்த 11 ஆண்டுகளில் இந்திய ஜனநாயகம், பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்புக்கு மோடி அரசாங்கம் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.பிர... மேலும் பார்க்க

கரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் ரத யாத்திரைக்கு வர வேண்டாம்!

கரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் ரத யாத்திரைக்கு வர வேண்டாம் என்று ஒடிசா சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்... மேலும் பார்க்க

மும்பை புறநகர் ரயில் விபத்துகளில் 20 ஆண்டுகளில் 51,000 பேர் மரணம்!

மும்பை: மும்பை புறநகர் ரயில்களில் விபத்துகள் தொடர்கதையாகி வருகின்றன. மும்பை புறநகர் ரயில் நிலையங்களில் ஏற்பட்டுள்ள விபத்துகளில் கடந்த 20 ஆண்டுகளில் 51,000க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்திருப்பது அதிர்ச... மேலும் பார்க்க

செனாப் பாலத்துக்கு முக்கிய பங்காற்றிய மாதவி லதா! யார் இவர்?

உலகின் மிக உயரமான ரயில் பாலமாக கட்டப்பட்டுள்ள செனாப் பாலத்தின் கட்டுமானத்துக்கு சென்னை ஐஐடியின் முனைவர் பட்டம் பெற்ற மாதவி லதா முக்கிய பங்காற்றியுள்ளார்.காஷ்மீா் பகுதிக்கு நேரடி ரயில் போக்குவரத்தை அளி... மேலும் பார்க்க

நக்சல்களின் வெடிகுண்டு தாக்குதல்: ஏஎஸ்பி மரணம்; காவலர்கள் பலர் காயம்!

சத்தீஸ்கரில் நக்சல்கள் வைத்த வெடிகுண்டு வெடித்ததில் காவல் துணை கண்காணிப்பாளர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் சில வீரர்கள் காயமடைந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் கோண்டா-எரபோரா சாலையில் உள்ள ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் "சிந்தூர்" மரக்கன்றுகளை நட்ட தில்லி முதல்வர்!

தில்லி ஷாலிமார் பாக் தொகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் மரம் நடுதல் குறித்த அரசின் பிரசாரத்தின் ஒரு பகுதியாக மாநில முதல்வர் ரேகா குப்தா "சிந்தூர்" மரக்கன்று ஒன்றை நட்டார். ஜூன் 5 அன்று உலக சுற்றுச்சூழல்... மேலும் பார்க்க