செய்திகள் :

அரசுப் பள்ளியில் "சிந்தூர்" மரக்கன்றுகளை நட்ட தில்லி முதல்வர்!

post image

தில்லி ஷாலிமார் பாக் தொகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் மரம் நடுதல் குறித்த அரசின் பிரசாரத்தின் ஒரு பகுதியாக மாநில முதல்வர் ரேகா குப்தா "சிந்தூர்" மரக்கன்று ஒன்றை நட்டார்.

ஜூன் 5 அன்று உலக சுற்றுச்சூழல் தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில், 1971 போரின் போது குறிப்பிடத்தக்க துணிச்சலைக் காட்டிய பெண்கள் குழுவால் அவருக்கு வழங்கப்பட்ட சிந்தூர் மரக்கன்றை நட்டார். சமீபத்தில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு மரியாதை செலுத்தும் விதமாக இது கடைப்பிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக முதல்வர் ரேகா கூறுகையில்,

நமது பிரதமர் சிந்தூர் மரக்கன்றை நட்டார். நானும் அதையே செய்ய விரும்பினேன். கடவுள் என் பிரார்த்தனைகளைக் கேட்டது போல் உள்ளது. இன்று காலை ஒரு பொதுமக்கள் ​​சிலர் எனக்கு 'சிந்தூர்' மரக்கன்று பரிசளித்தனர்.

தாயின் பெயரில் பிரசாரம் 2ஐத் தொடங்க நான் அந்த மரக்கன்றை நட்டேன். ஆயுதப்படைகளுக்கு ஆபரேஷன் சிந்தூருக்காக நன்றி. நமது ஆயுதப்படைகளும், பிரதமர் மோடியும் சகோதரிகளின் கண்ணியத்தைக் காப்பாற்றியுள்ளனர். இந்த நடவடிக்கையைத் தொடங்கியதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்று அவர் கூறினார்.

ஏப்ரல் 22 பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா தனது ராணுவ பதிலடியை ஆபரேஷன் சிந்தூர் எனப் பெயரிட்டது. பயங்கரவாதிகள் 26 பொதுமக்களைச் சுட்டுக் கொன்றனர். அனைவரும் ஆண்கள் மற்றும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் ஆவர்.

தில்லியில் முந்தைய ஆம் ஆத்மி அரசு மரங்களை நடவில்லை8. இந்த பிரசாரம் நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாங்கள் இந்த பிரசாரத்தைத் தொடங்குகிறோம் என்று அவர் கூறினார்.

மோடி அரசின் 11 ஆண்டுகள் = பொறுப்பின்மை + மாற்றமில்லை + வெறும் விளம்பரமே! ராகுல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை விமர்சித்துள்ளார்.பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பதவியேற்று ஓராண்டு முடிவுறும் நிலையில், பாஜக ... மேலும் பார்க்க

ஜனநாயகம், பொருளாதாரம், சமூகக் கட்டமைப்புக்கு மோடி அரசால் சேதம்: கார்கே

கடந்த 11 ஆண்டுகளில் இந்திய ஜனநாயகம், பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்புக்கு மோடி அரசாங்கம் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.பிர... மேலும் பார்க்க

கரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் ரத யாத்திரைக்கு வர வேண்டாம்!

கரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் ரத யாத்திரைக்கு வர வேண்டாம் என்று ஒடிசா சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்... மேலும் பார்க்க

மும்பை புறநகர் ரயில் விபத்துகளில் 20 ஆண்டுகளில் 51,000 பேர் மரணம்!

மும்பை: மும்பை புறநகர் ரயில்களில் விபத்துகள் தொடர்கதையாகி வருகின்றன. மும்பை புறநகர் ரயில் நிலையங்களில் ஏற்பட்டுள்ள விபத்துகளில் கடந்த 20 ஆண்டுகளில் 51,000க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்திருப்பது அதிர்ச... மேலும் பார்க்க

செனாப் பாலத்துக்கு முக்கிய பங்காற்றிய மாதவி லதா! யார் இவர்?

உலகின் மிக உயரமான ரயில் பாலமாக கட்டப்பட்டுள்ள செனாப் பாலத்தின் கட்டுமானத்துக்கு சென்னை ஐஐடியின் முனைவர் பட்டம் பெற்ற மாதவி லதா முக்கிய பங்காற்றியுள்ளார்.காஷ்மீா் பகுதிக்கு நேரடி ரயில் போக்குவரத்தை அளி... மேலும் பார்க்க

நக்சல்களின் வெடிகுண்டு தாக்குதல்: ஏஎஸ்பி மரணம்; காவலர்கள் பலர் காயம்!

சத்தீஸ்கரில் நக்சல்கள் வைத்த வெடிகுண்டு வெடித்ததில் காவல் துணை கண்காணிப்பாளர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் சில வீரர்கள் காயமடைந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் கோண்டா-எரபோரா சாலையில் உள்ள ... மேலும் பார்க்க