செய்திகள் :

Israel: நிவாரணப் பொருளுடன் காசா சென்ற கிரேட்டா தன்பர்க் கைது; இஸ்ரேல் சொல்வது என்ன?

post image

இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஓராண்டுக்குமேல் போர் நீடித்து வருகிறது. இந்த போரில் காசாவில் 54 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் காசாவுக்கு இஸ்ரேல் வழியாக நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வந்தன. ஆனால் அதனை இஸ்ரேல் திடீரென தடுத்து நிறுத்தியது. சர்வதேச அளவில் இது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இஸ்ரேல் - ஹமாஸ் போர்
இஸ்ரேல் - ஹமாஸ் போர்

ஆனால் முழுவீச்சில் இந்த பணிகள் நடைபெறவில்லை. இந்நிலையில் சுற்றுசூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ரிமா ஹசன் என 12 தன்னார்வலர்கள், நிவாரண பொருள்களை ஏற்றிக்கொண்டு காசாவை நோக்கி கடல் வழியாக 'மாட்லீன்' எனும் படகில் பயணம் செய்திருக்கின்றனர்.

கிரேட்டாவையும் அவருடன் வந்த தன்னார்வலர்களையும் இஸ்ரேல் கடற்படையினர் வழிமறித்து கைது செய்திருக்கின்றனர். இதனால் நிவாரண பொருட்களைக் காசாவுக்குள் கொண்டு சேர்க்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.

நிவாரணப் பொருட்களை ஏற்றி தன்னார்வலர்கள்
நிவாரணப் பொருட்களை ஏற்றி தன்னார்வலர்கள்

கைது செய்யப்பட்ட கிரேட்டா விளம்பர நோக்கங்களுக்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கிறார் என்று இஸ்ரேல் குற்றம்சாட்டியிருக்கிறது. கிரேட்டா மற்றும் அவருடன் வந்த 12 பேரும் விரைவில் அவரவர் நாடுகளுக்கு, நாடு கடத்தப்படுவார்கள் என்றும் இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது. இந்த சம்பவத்திற்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

``Out Of Control ஆக இருக்கும் பாலியல் `SIR'-களை எப்போது Control செய்வீர்கள்?'' - எடப்பாடி பழனிசாமி

தாம்பரம் அருகே உள்ள அரசு சேவை இல்லம் எனப்படும் மாணவியர் விடுதியில் தங்கி இருந்து 8-வது வகுப்பு படித்து வரும் மாணவிக்கு, அந்த விடுதியின் காவலர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இ... மேலும் பார்க்க

``தமிழ், தமிழ் என பேசும் அமித் ஷா கீழடி ஆய்வறிக்கையை இதுவரை அங்கீகரிக்காதது ஏன்?'' - ஆ.ராசா கேள்வி

திமுக துணைப் பொதுசெயலாளரும், எம்.பி-யுமான ஆர் ராசா இன்று (ஜூன் 9) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய விஷயங்கள் தமிழக... மேலும் பார்க்க

``முருகனே வந்தாலும் தமிழகத்தில் பா.ஜ.க-வை காப்பாற்ற முடியாது..'' - ஜோதிமணி எம்.பி விமர்சனம்

கரூர் எம்.பி ஜோதிமணி ஓராண்டு சாதனை விளக்க புத்தகத்தை புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை செக் போஸ்ட்டில் பொதுமக்களிடம் வழங்கினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கரூர் பாராளுமன்ற தொகுதியில் 2... மேலும் பார்க்க

``கச்சத்தீவை மீட்க வேண்டும்'' - அமித் ஷாவிடம் கோரிக்கை வைத்த மதுரை ஆதீனம்!

சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மதுரையில் நடைபெறும் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கூட்டணி கட்சித் தலைவர்களை சந்திப்பாரா என்பதுதான் த... மேலும் பார்க்க