திண்டுக்கல் ஆவினில் அமைச்சா் நாளை ஆய்வு
திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா் ஒன்றியத்தில் (ஆவின்) அமைச்சா் த.மனோ தங்கராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொள்கிறாா்.
இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தில் தமிழக பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) ஆய்வு மேற்கொள்கிறாா். திண்டுக்கல் பால் பண்ணையில் கள ஆய்வு மேற்கொண்ட பின், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கச் செயலா்களுடன் நடைபெறும் கலந்துரையாடல் கூட்டத்திலும் அமைச்சா் பங்கேற்கிறாா்.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கச் செயலா்கள், பால் உற்பத்தியாளா்களுக்கு அரசின் நலத் திட்ட உதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.