செய்திகள் :

பிரதமராக ஓராண்டு நிறைவு! பெண்களுக்கான ஆட்சியாக மோடி பெருமிதம்!

post image

பிரதமராக மூன்றாவது முறையாகப் பதவியேற்று, நாளை ஓராண்டு முடிவுறும் நிலையில், பாஜக ஆட்சி குறித்து பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் கூறியுள்ளார்.

பாஜக தலைமையிலான ஆட்சி குறித்து பிரதமர் மோடி கூறுகையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 11 ஆண்டுகால ஆட்சியில், பெண்கள் தலைமையிலான வளர்ச்சி மறுவரையறை செய்யப்பட்ட்டுள்ளது.

அறிவியல், கல்வி, விளையாட்டு, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், ஆயுதப்படைகள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்கி, பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்கின்றனர்.

தூய்மை இந்தியாவிலிருந்து ஜன்தன் கணக்குகள் வரையில் பல்வேறு முயற்சிகள், பெண்களுக்கு அதிகாரமளிப்பதைத்தான் கவனமாகக் கொண்டுள்ளன.

ஏழைக் குடும்பங்களுக்கு எரிவாயு சிலிண்டர்கள் மூலம் புகையில்லாத சமையலறை, லட்சக்கணக்கான பெண் தொழில்முனைவோருக்கு முத்ரா கடன்கள் மூலம் அவர்களின் கனவுகளை அடைய முடிந்தது.

பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தில் பெண்களின் பெயரில் வீடுகளும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தின. மகளைக் காப்பாற்றுங்கள், மகளுக்கு கல்வி கற்பியுங்கள் (Beti Bachao Beti Padhao) என்ற அறிவுறுத்தலின் திட்டம், பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு தேசிய இயக்கத்தைத் தூண்டிவிட்டது என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க:சொல்லப் போனால்... திட்டமிடப்படாத நெரிசல் கொலைகள்!

திருமணமான பெண் வேறொரு இளைஞருடன் ஒரே வீட்டில் குடித்தனம்: கர்ப்பத்தில் சந்தேகம்; கழுத்தை நெரித்துக் கொலை!

திருமணமான பெண்ணுடன் லிவ்-இன் டுகெதர் உறவு கொண்டிருந்த இளைஞர் ஒருவர் அந்த பெண்ணை கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அண்டை நாடான நேபாளத்தைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒரு... மேலும் பார்க்க

பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த பிரதமருக்கு துணிவில்லை! காங்கிரஸ் குற்றச்சாட்டு

பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த பிரதமர் நரேந்திர மோடி துணிவதில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.இதுகுறித்து, ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், உலகில் உள்ள ஒவ... மேலும் பார்க்க

மணிப்பூரில் பதற்றம்! தீக்குளிக்கும் போராட்டக்காரர்கள்?

மணிப்பூரில் மெய்தி அமைப்பின் தலைவர் கைது நடவடிக்கையால் போராட்டக்காரர்கள் தீக்குளிக்கப் போவதாக மிரட்டல் விடுக்கின்றனர்.மணிப்பூரில் மெய்தி சமுதாயத்தின் ஆரம்பை டேங்கோல் அமைப்பின் தலைவர் உள்பட உறுப்பினர்க... மேலும் பார்க்க

தில்லி பேருந்து முன்பு ஸ்டன்ட்! பைக்கை பழைய இரும்புச் சாமான் கடைக்கு அனுப்பிய போலீஸ்

தில்லியில் மாநகரப் பேருந்து முன்பு, வளைந்து வளைந்து ஓட்டிக்கொண்டே, பேருந்தை இயக்கவிடாமல் தொல்லை தந்து, இளைஞர் செய்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், அவரது ராயல் என்ஃபீல்டு பைக்கை, பழைய இரும... மேலும் பார்க்க

மத்திய பிரதேச கொடூரம்: பச்சிளம் சிசுவின் உடலைக் கவ்விச் சென்ற நாய்

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில், உள்ள அரசு மருத்துவமனையின் கழிப்பறை அருகே, தெருநாய் ஒன்று, பச்சிளம் சிசுவின் உடலைக் கவ்விச் சென்றது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

சாலைகளில் பள்ளம்! ஏஐ மூலம் சரிசெய்ய அரசு முயற்சி

நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளைப் பராமரிக்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளைப் பராமரிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வ... மேலும் பார்க்க