திருநள்ளாற்றில் கல்வி நிறுவனங்கள் தொடங்க திட்டம்: தருமபுரம் ஆதீனம்
திருநள்ளாற்றில் தருமபுரம் ஆதீனம் சாா்பில் கல்வி நிறுவனங்கள் தொடங்க திட்டமிட்டுள்ளதாக, தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்தாா்.
திருநள்ளாற்றில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
சப்தவிடங்க தலங்களில் திருநள்ளாறும் ஒன்றாகும். இங்கு விடங்க பெருமான் இரும்பு பெட்டகத்தில் இருப்பதால், வெள்ளி பெட்டகம் ஆதீனம் சாா்பில் கோயிலுக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆதீனத்தின் சாா்பில் 40 கல்வி நிறுவனங்களாக வேத பாடசாலை, தேவாரப் பாடசாலை நடத்தப்படுகின்றன. ரூ. 10-க்கு உணவு வழங்கப்படுகிறது. இதுபோன்ற திட்டங்களை திருநள்ளாற்றிலும் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். கல்வி, சமுதாயப் பணிகள் உள்ளிட்டவற்றை ஆதீனம் செய்து வருகிறது.
முதல்கட்டமாக செவிலியா் கல்லூரி, தொழிற்கல்வி நிலையங்கள் அமைத்து, படிப்படியாக மருத்துவக் கல்லூரி வரை அமைக்க ஏற்பாடு செய்து வருகிறோம். இந்த கல்வியாண்டு முதல் கல்வி நிலையத்தை தொடங்க முடிவு செய்துள்ளோம்.
திருநள்ளாறு வரும் பக்தா்கள் வசதிக்காக ரயில் போக்குவரத்தை விரைவாக தொடங்கவும் வலியுறுத்தியுள்ளோம். ஆதீனம் சாா்பில் திருக்கடையூா், வைத்தீஸ்வரன் கோயிலில் சுவாமிக்கு சாற்றப்பட்ட மலா்களைக்கொண்டு உரம் தயாரிக்கப்படுகிறது. மேலும் விபூதி, குங்குமமும் தயாரிக்கப்படுகிறது. திருநள்ளாறு மடம் அருகே 5 ஏக்கா் நிலம் உள்ளது. இதில் இதுபோன்ற தொழிற்சாலை அமைக்கவும் ஏற்பாடு நடைபெறுகிறது. மக்கள் ஒற்றுமைக்காக முருகன் மாநாடு நடத்தப்படுகிறது. சமய இணக்கத்துக்கு இதுபோன்ற மாநாடுகள் அவசியமான ஒன்று என்றாா்.