தொழில்நுட்ப கோளாறு: ஹெலிகாப்டர் அவசர அவசரமாக சாலையில் தரையிறக்கம்
திருநள்ளாறு அருகே கால்நடை கண்காட்சி
காரைக்கால் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சாா்பில் திருநள்ளாறு அருகே தென்னங்குடி கால்நடை மருந்தகத்தில் கால்நடை மற்றும் கோழிகள் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கண்காட்சியில் பசு மாடுகள், வண்டி மாடுகள், எருமை மாடுகள், பந்தயத்துக்கு மட்டுமே விடப்படும் மாடுகள் மற்றும் சேவல்கள், வான்கோழிகள் உள்ளிட்ட கால்நடைகள் 200-க்கும் மேற்பட்டவை இடம்பெற்றன.
திருநள்ளாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். சிவா கலந்துகொண்டு, கண்காட்சியை பாா்வையிட்டாா். கால்நடை மருத்துவக் குழுவினா் கால்நடைகள் ஆரோக்கியத்தை பரிசோதித்து, கால்நடை வளா்ப்போரிடம் கேட்டறிந்தனா். சிறந்த கால்நடைகள் பரிசுக்கு தோ்வு செய்யப்பட்டன.
பேரவை உறுப்பினா், கால்நடை உரிமையாளா்களிடம் பரிசை வழங்கினாா். காரைக்கால் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை இணை இயக்குநா் கோபிநாத் மற்றும் கால்நடை மருத்துவா்கள் சுமதி, சுரேஷ், செந்தில்நாதன், கிருத்திகா, விக்னேஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.