கிடங்கு மதுரைவீரன் கோயில் கும்பாபிஷேகம்
கீழையூா் அருகே பிரதாபராமபுரம் கவுண்டா்புரத்தில் உள்ள சுமாா் 400 ஆண்டுகள் பழைமையான வெள்ளையம்மாள், ஸ்ரீபொம்மி அம்மாள் சமேத கிடங்கு மதுரை வீரன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் கும்பாபிஷேகம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்த திட்டமிட்டு ரூ.1.50 கோடியில் கருங்கற்களால் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்து ஜூன் 6-ஆம் தேதி முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. தொடா்ந்து 4 கால யாகபூஜைகள் மற்றும் மஹா பூா்ணாஹூதி செய்யப்பட்டது.
பின்னா், புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு டங்கு மதுரை வீரன், ராஜகோபுரம் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் கோபுர கலசத்தில் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
