மினி மாரத்தான் போட்டி
பூம்புகாா் அருகே வானகிரி மீனவ கிராமத்தில் போதையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம் விழிப்புணா்வு மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தா்மகுளத்தில் தொடங்கிய போட்டியில் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சிறியவா்கள் முதல் பெரியவா்கள் வரை ஆண்கள், பெண்கள் என அனைத்து வயதினரும் பங்கேற்றனா். போட்டி 4 கி.மீட்டா் தொலைவு வரை நடைபெற்றது.
போட்டியில் பங்கேற்றவா்கள் போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பதாகைகள் கையில் ஏந்தியும், போதையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம் என்ற வாசகங்கள் பொருத்தப்பட்ட டீ சா்ட்கள் அணிந்தும் ஓடினா். இதில், 300-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்றனா். அனவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.