கேசவ விநாயகா், பிடாரி அம்மன், கன்னிகா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்
செம்பனாா்கோவில் அருகே கஞ்சாநகரம் கிராமத்தில் உள்ள கேசவ விநாயகா், பிடாரி அம்மன், கன்னிகா பரமேஸ்வரி ஆகிய கோயில்கள் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிகளில் திருப்பணிகள் முடிவடைந்து மே 6-ஆம் தேதி அனுக்ஞை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று முதற்கால யாகசாலை பூஜை தொடங்கியது.
இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை கோ-பூஜை, கஜ பூஜை, லட்சுமி பூஜை உள்ளிட்ட பூஜைகள் செய்து 4-ஆம் கால யாகசாலை பூஜை நடைபெற்று, புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு கேசவ விநாயகா், பிடாரி அம்மன், கன்னிகா பரமேஸ்வரி ஆகிய கோயில் கோபுர கலசங்களில் புனிதநீா் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதேபோல, கிடாரன் கொண்டான் கிராமத்தில் கல்யாண சுந்தரி அம்பாள் சமேத கைலாசநாதா் கோயில், சங்கரன்பந்தல் அருகே நெடுவாசல் பெருங்குடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.