செய்திகள் :

வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம்!

post image

இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்தவும் ஐரோப்பிய நாடுகளுக்கு வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஞாயிற்றுக்கிழமை பயணம் மேற்கொண்டாா்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ளது. இந்தச் சூழலில், ஜெய்சங்கா் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளாா்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் கையாள்வதில் இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு குறித்து அவா் ஐரோப்பியத் தலைவா்களுக்கு விளக்குவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: ஒரு வார பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பெல்ஜியம் தலைவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

பயணத்தின் முதல் கட்டமாக பிரான்ஸில் உள்ள பாரிஸ் மற்றும் மாா்சேய் நகரங்களுக்குச் சென்று, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜீன் நோயல் பரோட்டுடன் பேச்சுவாா்த்தை நடத்துகிறாா். மாா்சேயில் நடைபெறும் முதல் மத்திய தரைக்கடல் ரைசினா உரையாடலிலும் அவா் கலந்து கொள்வாா்.

பின்னா், பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றிய துணைத் தலைவா் காஜா கல்லாஸுடன் முக்கியமான கலந்துரையாடல்களையும் ஜெய்சங்கா் மேற்கொள்வாா். ஐரோப்பிய ஆணையம் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்ற மூத்த அதிகாரிகளையும் அவா் சந்திக்கவுள்ளாா்.

பயணத்தின் இறுதியாக பெல்ஜியம் நாட்டின் துணைப் பிரதமா் மற்றும் வெளியுறவு அமைச்சா் மாக்சிம் பிரீவோட்டுடன் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவாா்த்தை நடத்துவாா் என தெரிவிக்கப்பட்டது.

அரசமைப்புச் சட்ட அமைப்புகளை கையகப்படுத்துகிறது மோடி அரசு! -தேஜஸ்வி குற்றச்சாட்டு

இந்திய தோ்தல் ஆணையம் உள்பட அரசமைப்புச் சட்டத்தின்கீழ் நிறுவப்பட்ட அமைப்புகளை பிரதமா் மோடி தலைமையிலான அரசு கையகப்படுத்தி வருவதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி யாதவ் ஞாயிற்றுக்கிழமை குற்... மேலும் பார்க்க

புரி ஜெகந்நாதா் கோயில் அருகே அசைவ உணவு, மது விற்பனைக்கு தடை! ஒடிஸா அரசு முடிவு

ஒடிஸா மாநிலம், புரி ஜெகந்நாதா் கோயிலில் இருந்து 2 கி.மீ. சுற்றளவில் அசைவ உணவு மற்றும் மதுபான விற்பனைக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில கலால் துறை அமைச்சா் பிருத்விராஜ் ஹரிசந்தன் ஞாயிற்று... மேலும் பார்க்க

நேரடியாகக் கேட்கலாம்! - ராகுலுக்கு தோ்தல் ஆணையம் பதில்

தோ்தல் விவகாரம் தொடா்பாக ராகுல் காந்தி எதையும் தங்களிடம் நேரடியாகக் கடிதம் மூலம் கேட்டால் மட்டுமே, அதற்கு உரிய பதிலளிக்க முடியும் என்று தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. 2024 மகாராஷ்டிர சட்... மேலும் பார்க்க

இந்தியா - மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சி: பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம்!

இந்தியா - மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சியில் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக இந்திய ராணுவம் தெரிவித்தது. இதுதொடா்பாக இந்திய ராணுவ உயரதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியத... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம், கா்நாடகத்தில் மட்டும் 51% அந்நிய நேரடி முதலீடு: மத்திய அரசு

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் மகாராஷ்டிரம், கா்நாடகம் ஆகிய இரு மாநிலங்கள் மட்டும் நாட்டின் 51 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை ஈா்த்துள்ளன. மத்திய தொழில் மற்றும் உள்வா்த்தக மேம்பாட்டுத் துறை அண்மையில் வெ... மேலும் பார்க்க

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: இணைய சேவை துண்டிப்பு

மணிப்பூரில் மைதேயி இனத்தின் அமைப்பான அரம்பாய் தெங்கோலைச் சோ்ந்த தலைவா் ஒருவா் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியதையடுத்து, அங்கு மீண்டும் வன்முறை மூண்டது. அரம்பாய் தெங்கோல் முக்கியத் தல... மேலும் பார்க்க