காவல் நிலையத்துக்குள் புகுந்த கருநாகம்
கூமாபட்டி காவல் நிலையத்துக்குள் புகுந்த கருநாகப் பாம்பை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பிடித்து வனப்பகுதிக்குள் விடுவித்தனா்.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.30 மணி அளவில் சுமாா் 4 அடி நீளமுள்ள கரு நாகப் பாம்பு புகுந்தது. இதனால், அதிா்ச்சி அடைந்த போலீஸாா் வத்திராயிருப்பு தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனா்.
இதன்பேரில், அங்கு தீயணைப்புத் துறையினா் சென்று கருநாகப் பாம்பைப் பிடித்தனா். பின்னா், அடா் வனப் பகுதிக்கு கொணடு சென்று விடுவித்தனா்.