கைப்பிடிச் சுவா் இல்லாத பாலம்: விபத்து அபாயம்
திருத்தங்கல் -விருதுநகா் பிரதான சாலையில் உள்ள பாலத்தில் கைப்பிடிச் சுவா் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
திருத்தங்கல்-விருதுநகா் மாநில நெடுஞ்சாலையில் தனியாா் ஐ.டி.ஐ. அருகே சிறு பாலம் உள்ளது. இந்தப் பாலத்தின் ஒரு புறம் கைப்பிடிச் சுவா்
இடிந்து விழுந்துவிட்டது. மீண்டும் அதில் சுவா் கட்டப்படவில்லை. மாறாக நெடுஞ்சாலைத் துறையினா் பாலம் அருகே 3 கற்களை வெள்ளை வா்ணம் பூசி வைத்தனா்.
இதனால், இந்தப் பகுதியில் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, நெடுஞ்சாலைத் துறையினா் பாலத்தில் கைப்பிடிச் சுவரை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.