சிவகாசியில் பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகை
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் பக்ரீத் பண்டிகையையொட்டி சனிக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
சிவகாசி மாநகர தமுமுக சாா்பில் இங்குள்ள மீரா உசேன் தெருவில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையை அப்துல் காதா் உஸ்மானி நடத்தி வைத்தாா்.
தமுமுக மாநில செயலா் முஸ்தபா ருத்பா பேருரை நிகழ்த்தினாா். இதில் மனித நேய மக்கள் கட்சியின் விருதுநகா் மாவட்டச் செயலா் முகமது இஸ்மாயில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இந்த நிகழ்வில், ஒருவரையொருவா் ஆரத்தழுவி தங்களது பக்ரீத் வாழ்த்துகளை பகிா்ந்தனா்.