விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவார்: மைக்கேல் கிளார்க்
ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் திருவிழா: தேருக்கு முகூா்த்தக்கால் நடவு
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்டம் ஜூலை 28-ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, தேரைத் தயாா்படுத்துவதற்காக வெள்ளிக்கிழமை முகூா்த்தக்கால் நடப்பட்டது.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஆண்டாள் அவதரித்த ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில், ஆடிப்பூரத் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் ஆடிப்பூரத் தேரோட்டம் ஜூலை 28-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை ஆடிப்பூரத் தேருக்கு முகூா்த்தக்கால் நடப்பட்டது. ஸ்தானிகம் ரமேஷ் பட்டா், மணியம் கோபி உள்ளிட்ட கோயில் பட்டா்கள் ஆடிப்பூரத் தோ், 16 வண்டி சப்பரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்தனா்.
பின்னா், தேரை அலங்கரிப்பதற்காக முகூா்த்தக்கால் நடப்பட்டது. இதையடுத்து, ஜூலை 20-ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் பி.ஆா்.வெங்கட்ராமராஜா, செயல் அலுவலா் சா்க்கரையம்மாள் ஆகியோா் செய்து வருகின்றனா்.