செய்திகள் :

Bengaluru: 10 லட்சம் ஐடி ஊழியர்கள்; உலகின் முக்கிய தொழில்நுட்ப நகரங்களில் இடம் பெற்ற பெங்களூரு!

post image

உலகின் முக்கிய தொழில்நுட்ப நகரங்களில் ஒன்றாக பெங்களூரு வளர்ந்துள்ளது.

ரியல் எஸ்டேட் சேவை நிறுவனமான CBRE ஆல் வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய தொழில்நுட்ப திறமை வழிகாட்டி புத்தகம் கூறுவதன்படி, உலகளவில் 12 'பவர்ஹவுஸ்' சந்தைகளில் ஒன்றாக பெங்களூரு உருவாகியிருக்கிறது.

பெங்களூரில் இப்போது 10 லட்சத்துக்கும் அதிகமான தொழில்நுட்ப வல்லுநர்கள் வருமானம் ஈட்டுகின்றனர். ஆசியா - பசிபிக் பிராந்தியத்திலேயே ஒரே நகரில் இத்தனை பேர் இருப்பது இங்கேதான் என்கின்றனர்.

Techies

பெங்களூருவுடன் இந்த பட்டியலில்  சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க் மெட்ரோ, லண்டன், டோக்கியோ, பாரிஸ் மற்றும் சிங்கப்பூர் போன்ற முக்கிய தொழில்நுட்ப மையங்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Bengaluru சாதித்தது எப்படி?

CBRE அறிக்கை, தொழில்நுட்ப வல்லுநர்களை பணியமர்த்துவதற்கான செலவீனம், வல்லுநர்கள் எளிதாக கிடைக்கும் தன்மை (Availability) மற்றும் தரத்தின் அடிப்படையில் உலகம் முழுவதும் 115 சந்தைகளை பட்டியலிட்டுள்ளது.

அதிகமான வல்லுநர்கள் இருப்பதனால் மட்டுமல்ல அவர்களின் தனித்திறமை, ஏஐ உள்ளிட்ட சிறப்பு திறன்களில் அவர்களின் நிபுணத்துவம் ஆகியவற்றுடன் பெங்களூரு தனித்து நிற்கிறது.

Bengaluru
Bengaluru

பெங்களூரில் அமெரிக்காவின் சிறந்த தொழில்நுட்ப சந்தைகளில் காணப்படும் அளவுக்கு இணையாக செயற்கை நுண்ணறிவின் நிபுணத்துவம் பெற்ற பொறியாளர்கள் இருப்பதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது.

பெங்களூருவின் மக்கள் தொகையில் 75.5% பேர் வேலை செய்யும் வயதுள்ள நபர்கள். இவர்களின் எண்ணிக்கை கடந்த 2019-ம் ஆண்டுக்குப் பிறகு மட்டுமே 2.4% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. '

பெங்களூருவின் வலிமையான ஸ்டார்ட் அப் சூழலும் இதற்கு காரணம். 2024 ஆம் ஆண்டில் மட்டும், பெங்களூரு $3.3 பில்லியன் மதிப்புள்ள 140 VC ஒப்பந்தங்களைப் பெற்றது, அவற்றில் 34 AI சம்பந்தப்பட்டவை.

டெல்லி-என்.சி.ஆர் மற்றும் மும்பை ஆகிய நகரங்களும் வலுவான வளர்ச்சியைப் பெற்றுள்ளன.

தூத்துக்குடி: "குஜராத் உப்பு இறக்குமதிக்குத் தடை" - உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை; பின்னணி என்ன?

இந்தியாவில் குஜராத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடியில்தான் உப்பு அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் உப்பு, இயற்கையாகவே அதிக வெண்மை நிறம் உடையது என்பதால் தூத்துக்குடி உ... மேலும் பார்க்க

Tamilnadu: "நாளை இந்தியா என்ன வாங்கும் என்பதை தெரிந்துகொள்ள கோவை, சென்னை செல்லுங்கள்" - கோத்ரேஜ் CEO

பெரிய பெரிய நிறுவனங்கள், வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்களை (FMCG) ஏன் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்துகின்றன என்ற கேள்விக்கு கோத்ரேஜ் கன்ஸ்யூமர் பிராட்கட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி சுதிர் சீதாபதி தனது லி... மேலும் பார்க்க

GRT: வள்ளியூரில் வளம் சேர்க்க வந்த ஜிஆர்டி ஜுவல்லர்ஸ்; பிரகாசமான 64வது புதிய ஷோரூம்

ஒவ்வொரு நகையும் ஒரு நினைவை சுமந்து கொண்டிருக்கும் என்னும் கருத்திற்கேற்ப, கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் இத்தகைய கோடிக்கணக்கான நினைவுகளின் ஓர் அங்கமாக இருந்து வருகிறது. 1964-ஆம் ... மேலும் பார்க்க

நூற்றாண்டு கடந்த சிவகாசி பட்டாசு: புவிசார் குறியீடு வழங்கிட பட்டாசு உற்பத்தியாளர்கள் விண்ணப்பம்

’பட்டாசு’ என்றாலே நினைவுக்கு வருவது சிவகாசிதான். 1920-களில் சிவகாசி பகுதியில் நிலவிய வறட்சி காரணமாக மாற்றுத் தொழிலை உருவாக்கிட சிவகாசியைச் சேர்ந்த அய்யநாடார், சண்முக நாடார் இருவரும் மேற்கு வங்க மாநிலத... மேலும் பார்க்க

Taj: உலகத்தில் முதல்முறையாக சென்னையில் தாஜ் ரெசிடென்ஸி..!

நமக்கெல்லாம் தாஜ் என்றால் அது ஃபைவ் ஸ்டார் ஓட்டல் என்பதுதான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால் இனி தாஜ் என்றால் நட்சத்திர அடுக்குமாடி குடியிருப்புகளும் நினைவுக்கு வரும்.ஆம். சர்வதேச அளவில் முதல் முறையாக... மேலும் பார்க்க

Iphone: ஐபோன் உற்பத்தி இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு மாறினால்... ஏற்படும் விளைவு என்ன?

மோடி தான் எனது நண்பர் என அடிக்கடி கூறும் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியாவை ஒரு நட்பு நாடாக கருதவில்லையோ என்பதுதான் அவரின் அறிவிப்பில் நமக்கு தெரிய வருகிறது.அதாவது இந்தியாவில் ஐபோன் தயாரிப்ப... மேலும் பார்க்க