செய்திகள் :

US-China: ``சீன பூஞ்சை Covid-ஐ விட மோசமானது; போருக்கு சமம்..'' - அமெரிக்க நிபுணர் சொல்வது என்ன?

post image

சீனாவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு கடத்திச் செல்லப்பட்ட பூஞ்சை, வேளாண்-பயங்கரவாத ஆயுதமாக செயல்பட சாத்தியமுள்ளது என அமெரிக்க நீதித்துறைத் தெரிவித்துள்ளது.

புசாரியம் கிராமினேரம் (Fusarium graminearum) என்ற அந்த பூஞ்சை, மனிதர்கள் மற்றும் கால்நடைகளில் வாந்தி, கல்லீரல் பாதிப்பு மற்றும் இனப்பெருக்க குறைபாடுகளை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

புசாரியம் கிராமினேரம் (Fusarium graminearum)
புசாரியம் கிராமினேரம் (Fusarium graminearum)

அமெரிக்க நீதித்துறை இந்த பூஞ்சை பயிர்களில் ஏற்படுத்தும் கால் கருகல் நோய், பொருளாதாரத்தில் மிகப் பெரிய சரிவை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளது.

யூன்கிங் ஜியான் என்ற சீன அறிவியலாளர், அவரது காதலி ஜூன்யோங் லியூ என்ற பெண்ணைப் பார்ப்பதற்காக 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்கா வந்தபோது புசாரியம் கிராமினேரம் பூஞ்சையை எடுத்துவந்துள்ளார்.

இந்த வழக்கு பற்றி பேசிய அமெரிக்காவின் சீன விவகார நிபுணர் கார்டன் ஜி சாங், சீன தம்பதி பூஞ்சையை எடுத்து வந்த செயல், அமெரிக்காவுடன் போரில் ஈடுபடுவதற்கு சமமானது என்றும், சீனா உடனான உறவுகளை முறித்துக்கொள்வது உள்ளிட்ட தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் Covid-ஐ விட அதிக பாதிப்புகள் ஏற்படும் சாத்தியமுள்ளது என்றும் கூறியுள்ளார்.

US - China
US - China

இந்த பூஞ்சையை ஆராய்ச்சிக்காக அமெரிக்கா எடுத்து வந்ததாகக் கூறுகிறார், FBI -ஆல் கைது செய்யப்பட்ட 34 வயது அறிவியலாளர் யூன்கிங் ஜியான்.

கார்டன் ஜி சாங்கின் முடிவுகள் மீது பலரும் சந்தேகம் எழுப்புகின்றனர். ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் அறிக்கையில், இந்தப் பூஞ்சை வேளாண்-தீவிரவாத ஆயுதம் எனக் கூறும் அளவு ஆபத்தானது அல்ல என்றும், இதனால் ஏற்படும் பிரச்னைகளை பூஞ்சைக் கொல்லிகள் மற்றும் பிற வழிமுறைகளைப் பயன்படுத்திக் கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் போகும் முதல் இந்தியர் - யார் இந்த சுபான் ஷு சுக்லா?

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவுடன் இணைந்து 2025ல் `ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4' என்ற திட்டத்தை செயல்படுத்தியது. அதன்படி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வீர... மேலும் பார்க்க

Space: "விண்வெளியிலிருந்து சிக்னல் அனுப்பும் 'மர்ம' பொருள்" - அறிவியலாளர்கள் சொல்வது என்ன?

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வானியலாளர்கள் ஒவ்வொரு 44 நிமிடங்களுக்கும் ஒருமுறை பிரபஞ்சத்திலிருந்து மர்மப் பொருளொன்று பூமிக்கு எக்ஸ்-ரே மற்றும் ரேடியோ சிக்னல்களை அனுப்புவதாகக் கண்டறிந்துள்ளனர்.இது இன்றுவரை ... மேலும் பார்க்க

மன அழுத்தத்தை அளவிட ”இ-டாட்டூவை” அறிமுகப்படுத்திய ஆராய்ச்சியாளர்கள்! - எப்படி செயல்படும் தெரியுமா?

மன அழுத்தத்தை அளவிடக்கூடிய ஒரு மின்னணு பச்சை குத்தலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இதனை இ-டாட்டூ என்கின்றனர். பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் மனித வாழ்க்கை முறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள... மேலும் பார்க்க

`தங்கமாக மாறிய ஈயம்' - செயற்கை தங்கம் கண்டுபிடிப்பும் வரலாறும்.. இனி தங்கம் விலை?

`செயற்கை தங்கம்' எப்படி உருவாக்கப்பட்டது?ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் செயற்கையாக மிக நுண்ணிய அளவில் தங்கத்தை உற்பத்தி செய்துள்ளனர். இப்படி உருவான தங்கம் ஒரு வினாடிக்குள் தன்னை மாய்த்துக் கொண்டது. எப்படி... மேலும் பார்க்க

பூமியின் மையத்திலிருந்து பொங்கி வழியும் தங்கம்; புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது என்ன?

பூமியின் மையத்திலிருந்து தங்கம் மற்றும் பிற விலைமதிப்பற்ற உலோகங்கள் மேற்பரப்புக்கு கசிந்து வருவதாக சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஹவாய் எரிமலை பாறைகள் பற்றிய ஒரு புதிய ஆய்வில் தங்கம் கசிந்... மேலும் பார்க்க

ஒலி அலைகளால் உடல் எடையை குறைக்க முடியுமா? - புதிய ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன?

ஒலியைப் பற்றிய சமீபத்திய ஆய்வில் சத்தத்தைப் பயன்படுத்தி உடல் எடையைக் குறைக்க முடியும் எனக் கண்டறிந்துள்ளனர். ஜப்பானில் உள்ள கியோட்டோ பல்கலைக்கழகம் மற்றும் கன்சாய் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த ஆராய்ச்சியாள... மேலும் பார்க்க