செய்திகள் :

Sitaare Zameen Par: "இதனால் நஷ்டம் ஏற்படலாம்; ஆனால்..." - OTTயில் படத்தை வெளியிட மறுத்த ஆமீர் கான்

post image

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் நடித்த சிதாரே ஜமீன் பர் படம் வரும் 20ம் தேதி திரைக்கு வருகிறது.

இப்படத்தை ஆமீர் கான் பெரிதும் நம்பி இருக்கிறார். இதற்காகத் தொடர்ச்சியாகப் படத்தை விளம்பரப்படுத்தும் வேலையில் ஆமீர் கான் ஈடுபட்டுள்ளார்.

இப்படத்தை ஓ.டி.டி தளமான நெட்பிளிக்ஸில் வெளியிடத் தயாராக இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

அதேசமயம் யூடியூப்பில் இப்படத்தைப் பணம் கொடுத்துப் பார்க்கும் வகையில் வெளியிட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

ஆமீர் கான்
ஆமீர் கான்

இதையடுத்து நெட்பிளிக்ஸ் நிறுவனமும் தங்களுக்கு இப்படத்தின் டிஜிட்டல் உரிமையைக் கொடுக்கவேண்டும் என்று ஆமீர் கானிடம் கேட்டுக்கொண்டதாகக் கூறப்பட்டது.

அதோடு ஆமீர் கான் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு டிஜிட்டல் உரிமைக்காக ரூ.125 கோடியைக் கொடுப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் அதனை ஆமீர் கான் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

படம் தியேட்டரில் மட்டுமே வெளியாகும் என்று  ஆமீர் கான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆமீர் கான் அளித்துள்ள பேட்டியில், ''தியேட்டரில் வெளியான பிறகு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. அப்படத்தை வெளியிடப் பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் நான் அனைத்தையும் நிராகரித்துவிட்டேன். ஏனென்றால் நான் சினிமாவை நம்பக்கூடியவன். சினிமாவால்தான் நான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். மக்கள் எனது படத்தை தியேட்டரில் பார்ப்பதால்தான் நான் இப்போது உங்கள் முன்னால் இருக்கிறேன்.

ஆமீர் கான்
ஆமீர் கான்

நான் முட்டாளாக இருக்கலாம். ஒ.டி.டி தளத்திற்கு விற்பனை செய்யாமல் நான் தவறு செய்திருக்கலாம். மிகப்பெரிய பண இழப்பு கூட ஏற்படலாம். என்ன நடக்கிறது என்பதைப் பின்னால் பார்த்துக்கொள்ளலாம்.

ஒவ்வொரு படத்தையும் பார்க்க தியேட்டருக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே செல்கிறது. எனவே அதனை அதிகரிப்பதுதான் எனது வேலை. நான் எனது ரசிகர்களையும், தியேட்டர்களையும் நம்புகிறேன்.

ஒ.டி.டி தளத்தில் விற்பனை செய்யாமல் எந்த தயாரிப்பாளரும் படத்தைத் தயாரிக்கத் தொடங்குவதில்லை. நான் மட்டும்தான் ஒ.டி.டி தளத்திற்கு விற்பனை செய்யாமல் படம் தயாரிக்கிறேன். எனக்கு அதில் விருப்பம் இல்லை'' என்று தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் நடிகை ஜெனிலியா தேஷ்முக், கோபி கிருஷ்ணா வர்மா உட்படப் பலரும் நடித்துள்ளனர். 

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Aamir Khan: `மகாபாரதம்' படத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கா? - நடிகர் ஆமீர் கான் சொல்வது என்ன?

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தற்போது தனது புதிய படமான சிதாரே ஜமீன் பர் படத்தை விளம்பரப்படுத்தும் வேலையில் பிஸியாக இருக்கிறார். இப்படம் வரும் 20-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், டிவி ஷோ ஒன்றி... மேலும் பார்க்க

Madhavan: தகர்ந்த ராணுவ கனவு; கைகொடுத்த சினிமா; மாதவன் நடிகரான கதை!

நடிகர் ஆர்.மாதவன் ஆரம்பத்தில் இந்தி படங்களில் நடித்தபோதிலும், தமிழில் நடித்த பிறகுதான் பிரபலமானார். ஆர்.மாதவன் இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் நடிகராக மாறியது வித்தியாசமான ஒரு அனுபவம்... மேலும் பார்க்க

"கன்னித்தன்மையுள்ள மனைவியை எதிர்பார்க்காதீர்" - வைரலாகும் பிரியங்கா சோப்ராவின் பழைய பேட்டி

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தமிழன் படத்தில் அறிமுகமானாலும் பின்னர் பாலிவுட் பக்கம் சென்றார்.பாலிவுட்டைத் தொடர்ந்து இப்போது அமெரிக்கப் பாடகர் நிக் ஜோனஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவி... மேலும் பார்க்க

``தலைசிறந்த ஆன்மிக நகரில் எனது வீடு.." - அயோத்தி ராமர் கோயில் அருகில் நிலம் வாங்கிய அமிதாப்பச்சன்

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மும்பையில் பெரிய அளவில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகிறார். ஏராளமான வீடு மற்றும் அலுவலகங்களை வாங்கி வாடகைக்கு விட்டிருக்கிறார்.மும்பைக்கு அடுத்த படியாக தனது சொந்த... மேலும் பார்க்க

Spirit படத்தில் நடிக்க ரூ.20 கோடி? தீபிகா படுகோனேவுக்குப் பதில் டிம்ரியை ஒப்பந்தம் செய்த சந்தீப்

தனது ஸ்பிரிட் படத்தில் நடிக்க, பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுடன் தெலுங்கு பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.இதில் நடிக்கவும் ஆரம்பத்தில் ஒப்புக்கொண்டார். அதேசமயம் தீபிகா... மேலும் பார்க்க

`இது நம் கடமை துணை நிற்போம்' மறைந்த ராணுவ வீரர்களுக்காக ப்ரீத்தி ஜிந்தா செய்த நற்செயல்

பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா, ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, மறைந்த ராணுவ வீரர்களின் மனைவி, குழந்தைகளுக்காக ரூ.1.10 கோடி வழங்கி இருக்கிறார். மறைந்த ராணுவ வீரர்களின் குடும்ப ந... மேலும் பார்க்க