செய்திகள் :

பல்வேறு துறைகளில் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர்: பிரதமா் மோடி பெருமிதம்

post image

புது தில்லி: தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்ற 11 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளதாகவும், பெண்கள் சாதனை படைத்து வருவதாக பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

பிரதமராக மூன்றாவது முறையாக அவா் கடந்த ஆண்டு ஜூன் 9-ஆம் தேதி பொறுப்பேற்றாா்.

இதையடுத்து, 2014-இல் இருந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பல்வேறு துறைகளில் பெண்கள் முன்னேற்றத்துக்காக மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தேர்தல் 'மோசடி': ராகுல் நேரடியாக கேட்டால் பதில் கிடைக்கும்- தேர்தல் ஆணையம்

அதில், கடந்த 11 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மறுவரையறை செய்துள்ளதாகவும், ‘பெண்களின் கண்ணியத்தை உறுதிசெய்த ‘தூய்மை இந்தியா’ திட்டம், நிதி அதிகாரமளித்தலுக்கான ‘ஜன் தன்’ திட்டம், கடனுதவிக்கான ‘முத்ரா’ திட்டம், பிரதமர் வீட்டு வசதி திட்டத்திந் கீழ் பெண்களின் பெயர்களில் வீடுகள் வழங்கும் திட்டம், ‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம் திட்டம்’, உஜ்வாலா திட்டம் பல வீடுகளுக்கு புகை இல்லாத சமையலறைகளைக் கொண்டு வந்த ஒரு மைல்கல் சாதனை‘இலவச சமையல் எரிவாயு திட்டம்’’ என நமது பெண்கள் சக்தியை மேம்படுத்துவதில் எண்ணற்ற திட்டங்களை கடந்த 11 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி செயல்படுத்தியுள்ளது.

இதனால் அறிவியல், கல்வி, விளையாட்டு, புத்தாக்கம், ராணுவம் என பல்வேறு துறைகளிலும் பெண்கள் சாதித்து வருவதுடன் பலரையும் ஊக்குவித்து வருகின்றனா் என குறிப்பிட்டுள்ளார்.

மீனவா்கள் பிரச்னைக்கு முடிவு எட்ட வேண்டும்: அமித்ஷாவிடம் மதுரை ஆதீனம் மனு

இலங்கைத் தமிழா்களுக்கு தனி நாடு வேண்டும், கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும், மீனவா்கள் பிரச்னைக்கு முடிவு எட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் மதுரை ஆதீனம் மனு... மேலும் பார்க்க

தோட்டத்து வீட்டில் முதியவா்கள் படுகொலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அண்ணாமலை

தனியாக வசித்து வரும் முதியவா்கள் தொடா்ந்து படுகொலை செய்யப்படுவது கவலை அளிக்கிறது இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.இது குறி... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனத்திற்கு 24 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் பக்தா்கள் காத்திருக்க வேண்டி உள்ளது.திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. விடுமுறை நாள்கள் என்றில்லா... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் பயன்பாட்டில் இல்லாத மின்கம்பம் விழுந்து முதியவர் பலி

தஞ்சாவூா்: தஞ்சாவூா் பெரிய கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை மரம் வெட்டும்போது பயன்பாட்டில் இல்லாத மின் கம்பம் சாய்ந்தில் முதியவர் ஒருவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ... மேலும் பார்க்க

7 நாள் பயணமாக ஜெய்சங்கா் பிரான்ஸ், பெல்ஜியம் பயணம்

புது தில்லி: இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்தவும் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் நாடுகளுக்கு ஏழு நாள் அரசுமுறைப் பயணமாக மத்திய வெளியுற... மேலும் பார்க்க

விவசாயிகளின் நலன்கள் பாதுகாக்கப்படும்: அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான்

பெங்களூரு: எளிதில் பயிரிடக்கூடிய பழங்கள் மற்றும் பயிர்களை நோக்கி விவசாயத்தை பல்வகைப்படுத்துவது துறையின் வளர்ச்சிக்கு அவசியம் என்றும், விவசாயிகளின் நலன்கள் பாதுகாக்கப்படும் என மத்திய வேளாண்துறை அமைச்சர... மேலும் பார்க்க