மீனவா்கள் பிரச்னைக்கு முடிவு எட்ட வேண்டும்: அமித்ஷாவிடம் மதுரை ஆதீனம் மனு
பல்வேறு துறைகளில் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர்: பிரதமா் மோடி பெருமிதம்
புது தில்லி: தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்ற 11 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளதாகவும், பெண்கள் சாதனை படைத்து வருவதாக பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
பிரதமராக மூன்றாவது முறையாக அவா் கடந்த ஆண்டு ஜூன் 9-ஆம் தேதி பொறுப்பேற்றாா்.
இதையடுத்து, 2014-இல் இருந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பல்வேறு துறைகளில் பெண்கள் முன்னேற்றத்துக்காக மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தேர்தல் 'மோசடி': ராகுல் நேரடியாக கேட்டால் பதில் கிடைக்கும்- தேர்தல் ஆணையம்
அதில், கடந்த 11 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மறுவரையறை செய்துள்ளதாகவும், ‘பெண்களின் கண்ணியத்தை உறுதிசெய்த ‘தூய்மை இந்தியா’ திட்டம், நிதி அதிகாரமளித்தலுக்கான ‘ஜன் தன்’ திட்டம், கடனுதவிக்கான ‘முத்ரா’ திட்டம், பிரதமர் வீட்டு வசதி திட்டத்திந் கீழ் பெண்களின் பெயர்களில் வீடுகள் வழங்கும் திட்டம், ‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம் திட்டம்’, உஜ்வாலா திட்டம் பல வீடுகளுக்கு புகை இல்லாத சமையலறைகளைக் கொண்டு வந்த ஒரு மைல்கல் சாதனை‘இலவச சமையல் எரிவாயு திட்டம்’’ என நமது பெண்கள் சக்தியை மேம்படுத்துவதில் எண்ணற்ற திட்டங்களை கடந்த 11 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி செயல்படுத்தியுள்ளது.
இதனால் அறிவியல், கல்வி, விளையாட்டு, புத்தாக்கம், ராணுவம் என பல்வேறு துறைகளிலும் பெண்கள் சாதித்து வருவதுடன் பலரையும் ஊக்குவித்து வருகின்றனா் என குறிப்பிட்டுள்ளார்.