செய்திகள் :

Anurag Kashyup: `மாமியார் மருமகள் கதைகளை...' - நெட்ஃபிளிக்ஸ் CEO, ஏக்தா கபூருடன் மோதல் ஏன்?

post image

தயாரிப்பாளரும் தொலைக்காட்சி அதிபருமான ஏக்தா கபூர், அனுராக் காஷ்யப் கூறிய "மாமியார் மருமகள் கதைகள்" விமர்சனத்துக்காக கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.

தற்போது பாலிவுட்டில் பெரும் விவாதமாகியிருக்கும் இந்த பிரச்னைகள் நெட்ஃபிளிக்ஸ் சி.இ.ஒ டெட் சரண்டோஸின் கருத்துக்களில் இருந்து தொடங்கியது.

டெட் சரண்டோஸ்
டெட் சரண்டோஸ்

"சேக்ரட் கேம்ஸ்... சரியான முடிவா?"

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "இந்தியாவில் சேக்ரட் கேம்ஸ் நிகழ்ச்சியுடன் நெட்ஃபிளிக்ஸை லான்ச் செய்தது சரியான முடிவா எனத் தெரியவில்லை. இன்னும் அதிக மக்கள் ஆதரவு கிடைக்கும் நிகழ்ச்சியுடன் தொடங்கியிருக்கலாம் என நினைக்கிறேன். எனக்கு அதை மீண்டும் மாற்றியமைக்க வாய்ப்பு கிடைத்தால் சேக்ரட் கேம்ஸை இரண்டு ஆண்டுகள் கழித்துதான் எடுத்திருப்போம்" எனப் பேசியிருந்தார்.

அனுராக் காஷ்யப் சேக்ரட் கேம்ஸ் தொடரின் இணை இயக்குநரும் தயாரிப்பாளரும் ஆவார்.

Anurag Kashyup பேசியது என்ன?

நெட்ஃபிளிக்ஸ் சி.இ.ஒ கருத்தால் கொதிப்படைந்த அவர், "டெட் சரண்டோஸ் மாமியார் மருமகள் (சாஸ்-பாஹு) கதையுடன் தொடங்கியிருக்க வேண்டும்... அதை நன்றாக செய்திருப்பார்.

அனுராக் காஷ்யப்
அனுராக் காஷ்யப்

கதை சொல்லுதல் என வந்துவிட்டால் இந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் முட்டாள்கள் என்பது எனக்கு எப்போதும் தெரியும். ஆனால் டெட் சரண்டோஸ் முட்டாள்தனத்துக்கான வரையறையாக இருந்திருக்கிறார் என்பது எனக்கு தெரியாது. இதைக் கண்டுபிடித்ததில் மகிழ்ச்சி, இப்போது எல்லாமும் தெளிவாகிறது" எனக் கடுமையாக சமூக வலைத்தளங்களில் எழுதினார்.

அனுராக் நெட்ஃபிளிக்ஸை விமர்சிப்பது இது முதன்முறை அல்ல.

சமீபத்தில் ஏக்தா கபூரின் பாலாஜி டெலிஃபிலிம்ஸ் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தைச் சுட்டிக்காட்டியே அனுராக் 'சாஸ்-பாஹு' எனப் பேசியதாகக் கருதப்படுகிறது.

Ektaa Kapoor
Ektaa Kapoor

நீங்கள்தான் வர்க்கவாதிகளாக இருக்கிறீர்கள்!

அனுராக் கருத்தை எதிர்த்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஏக்தா கபூர், "'நீ பெரிய முட்டாள்' எனக் கூறுவதன் மூலம் நீங்கள் (அனுராக்) மிகவும் புத்திசாலியாகவும் கூலான ஆளாகவும் இருப்பதுபோல உங்களுக்கு ஒரு சாதகம் ஏற்படுகிறது... ஆனால் அப்படியில்லை. சுய விழிப்புணர்வு வேண்டாமா?

சாஸ்-பாஹு (மாமியார் மருமகள் நாடகங்கள்) இந்திய மக்களிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் (இந்தியாவில் பெண்களுக்கு எப்படி ஒரு குரல் கிடைத்தது என்பது) மதிப்புமிக்க சிகாகோ ஆராய்ச்சியால் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது!

எல்லாரையும் உள்ளடக்கிய உலகத்தைப் பேசும் கலைஞர்கள்தான் மிகவும் வர்க்கவாதிகளாக இருக்கிறீர்கள்.

ஜனநாயகம் மற்றும் நியாயத்துக்காக 'நாங்கள் சிறந்தவர்கள்.. நீங்கள் எங்களுடன் சேர்ந்து அமர முடியாது' என்ற மனப்பான்மையை (attitude) நாம் கைவிட வேண்டும். எல்லோருக்கும் அன்பும் ஒளியும் கிடைக்கட்டும்". என பதிவிட்டிருந்தார்.

Aamir Khan: ``நானும் மணிரத்னமும் இணைய வேண்டிய படம்..'' - அமீர் கான் சொன்ன கதை என்ன?

இந்திய சினிமாவின் உச்சத்தில் இருக்கும் கலைஞர்களான அமீர் கான் மற்றும் மணிரத்னம் இடையே நல்ல நட்புறவு இருந்தாலும், இருவரும் இதுவரைத் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றியது இல்லை. ஷாரூக் கான், அபிஷேக் பச்சன்... மேலும் பார்க்க

Deepika: ``நான் தான் பிரேக் அப் செய்தேன்; இப்போது அவர் ஸ்டார்'' - முன்னாள் காதலன் பேசியதென்ன?

தீபிகா படுகோனே 2000-களில் மும்பைக்கு வந்துள்ளார். மாடலிங் துறையில் வெற்றிகரமாக இயங்கிய அவர், பின்னர் பாலிவுட்டில் கால் பதித்துள்ளார். அந்த காலத்தில் தீபிகா மற்றும் முசமில் இப்ராஹிம் காதலித்துள்ளனர். ம... மேலும் பார்க்க

Sitaare Zameen Par: "இதனால் நஷ்டம் ஏற்படலாம்; ஆனால்..." - OTTயில் படத்தை வெளியிட மறுத்த ஆமீர் கான்

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் நடித்த சிதாரே ஜமீன் பர் படம் வரும் 20ம் தேதி திரைக்கு வருகிறது.இப்படத்தை ஆமீர் கான் பெரிதும் நம்பி இருக்கிறார். இதற்காகத் தொடர்ச்சியாகப் படத்தை விளம்பரப்படுத்தும் வேலையில் ஆ... மேலும் பார்க்க

Aamir Khan: `மகாபாரதம்' படத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கா? - நடிகர் ஆமீர் கான் சொல்வது என்ன?

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தற்போது தனது புதிய படமான சிதாரே ஜமீன் பர் படத்தை விளம்பரப்படுத்தும் வேலையில் பிஸியாக இருக்கிறார். இப்படம் வரும் 20-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், டிவி ஷோ ஒன்றி... மேலும் பார்க்க

Madhavan: தகர்ந்த ராணுவ கனவு; கைகொடுத்த சினிமா; மாதவன் நடிகரான கதை!

நடிகர் ஆர்.மாதவன் ஆரம்பத்தில் இந்தி படங்களில் நடித்தபோதிலும், தமிழில் நடித்த பிறகுதான் பிரபலமானார். ஆர்.மாதவன் இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் நடிகராக மாறியது வித்தியாசமான ஒரு அனுபவம்... மேலும் பார்க்க

"கன்னித்தன்மையுள்ள மனைவியை எதிர்பார்க்காதீர்" - வைரலாகும் பிரியங்கா சோப்ராவின் பழைய பேட்டி

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தமிழன் படத்தில் அறிமுகமானாலும் பின்னர் பாலிவுட் பக்கம் சென்றார்.பாலிவுட்டைத் தொடர்ந்து இப்போது அமெரிக்கப் பாடகர் நிக் ஜோனஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவி... மேலும் பார்க்க