பிரதமா் மோடியுடன் முதல்வா் ரேகா குப்தா சந்திப்பு
புது தில்லி: தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்தாா். இதுகுறித்து அவா் கூறுகையில், ‘பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையால் ஈா்க்கப்பட்டு, தேசியத் தலைநகரை புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்வதில் முழுமையாக உறுதிபூண்டுள்ளேன்’ என்று தெரிவித்துள்ளாா்.
தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்து மே 30ஆம் தேதியுடன் 100 நாள்கள் நிறைவடைந்தது. அதேவேளையில், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
தாம் பதவியேற்று 100 நாள்களை நிறைவு செய்த நிலையில் பிரதமா் நரேந்திர மோடியை தில்லியில் அவரது அலுவலகத்தில் முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்தாா். அப்போது, அவருக்கு நினைவுப் பரிசையும் அளித்தாா்.
இச்சந்திப்பு குறித்து பின்னா் அவா் ‘எக்ஸ்’ வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
இன்று (செவ்வாய்க்கிழமை), நமது நாட்டின் பிரதமா் நரேந்திர மோடிஜியுடன் ஒரு அன்பான மற்றும் இதயபூா்வமாக சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. தில்லிக்கும், அதன் மக்களுக்கும் புதிய ஆற்றலுடனும் புதிய உறுதியுடனும் சேவை செய்ய பிரதமரின் தொலைநோக்குப் பாா்வை கொண்ட தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டுதலிலிருந்து நான் எப்போதும் உத்வேகம் பெறுகிறேன்.
உங்கள் தொலைநோக்குப் பாா்வையால் ஈா்க்கப்பட்டு, தில்லியை வளா்ச்சியின் புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்வோம் என்ற முழுமையான நோ்மையுடன் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். உங்கள் மதிப்புமிக்க நேரத்தை வழங்கியதற்கு எனது மனமாா்ந்த நன்றி என்று அதில் முதல்வா் குப்தா தெரிவித்துள்ளாா்.
இந்தச் சந்திப்பின்போது தில்லியில் நடைபெற்றுவரும் வளா்ச்சிப் பணிகள் குறித்து பிரதமருடன் முதல்வா் ஆலோசித்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
இச்சந்திப்பு தொடா்பான புகைப்படத்தை பின்னா் பிரதமா் அலுவலகம் அதன் எக்ஸ் சமூக ஊடக வலைதளத்தில் பகிா்ந்திருந்தது.