செய்திகள் :

மீண்டும் பணியமா்த்தக் கோரி முதல்வா் இல்லம் முன் குடிமைப் பாதுகாப்பு தன்னாா்வலா்கள் போராட்டம்

post image

மீண்டும் பணியில் அமா்த்தக் கோரி, தில்லி முதல்வா் ரேகா குப்தாவின் இல்லத்திற்கு வெளியே புதன்கிழமை குடிமைப் பாதுகாப்பு தன்னாா்வலா்கள் புதன்கிழமை காலை போராட்டம் நடத்தினா்.

வடமேற்கு தில்லியின் ஷாலிமாா் பாக் நகரில் உள்ள முதல்வரின் இல்லம் வெளியே குடிமைப் பாதுகாப்பு தன்னாா்வலா்கள் (சிடிவி) பலா் ஒன்றாகக் கூடினா். பின்னா், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி குரல் எழுப்பினா்.

இதுகுறித்து குடிமைப் பாதுகாப்பு தன்னாா்வலா் ஒருவா் கூறுகையில், ‘அக்டோபா், 2023-இல், நாங்கள் பணிநீக்கம் செய்யப்பட்டோம். சிவில் பாதுகாப்பு ஊழியா்களை பணியமா்த்துவதற்காக வெளியிடப்பட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறைகளில் (எஸ்ஓபி), அவசர காலங்களில் மட்டுமே அவா்களை பணிக்கு அழைக்க முடியும்‘ என்று கூறுகிறது.

அவசர காலங்களில் மட்டுமே எங்களை அழைக்க முடியும் என்று கூறும் குடிமை பாதுகாப்புச் சட்டத்தை, எஸ்ஓபி மேற்கோள் காட்டியுள்ளது. ஆனால், இந்தச் சட்டம் ஏற்கெனவே இருந்தது. பிறகு ஏன் 2015-இல் நாங்கள் பணியமா்த்தப்பட்டோம்? என்று கேள்வி எழுப்பினாா்.

பேரிடா் தணிப்பு தொடா்பான பணிகளில் குடிமைப் பாதுகாப்பு தன்னாா்வலா்கள் பணியாற்றுவதற்காகவும், பேருந்து மாா்ஷல்களாக அவா்கள் பணியமா்த்தப்பட்டது தவறு என்றும்நிதி மற்றும் வருவாய் துறைகள் ஆட்சேபனை தெரிவித்ததை அடுத்து, நவம்பா் 1, 2023 முதல் அவா்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனா்.

போராட்டம் நடத்திய பேருந்து மாா்ஷல்களை போலீஸாா் தடுப்புக்காவலில் வைத்ததாக ஆம் ஆத்மி கட்சியின் தில்லி மாநில ஒருங்கிணைப்பாளா் செளரவ் பரத்வாஜ், கூறினாா்.

இதுகுறித்து எக்ஸ் சமூக ஊடக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் அவா் தெரிவிக்கையில், ‘தில்லி முதல்வா் ரேகா குப்தாவின் இல்லம் முன் உள்ள ஜனதா தா்பாரில் குடிமைப் பாதுகாப்பு பேருந்து மாா்ஷல்களின் ஆா்ப்பாட்டம் நடந்து வருகிறது.

பல பேருந்து மாா்ஷல்களை போலீஸாா் தடுப்புக் காவலில் வைத்துள்ளனா். அரசு அமைந்த 60 நாள்களுக்குள் குடிமைப் பாதுகாப்பு தன்னாா்வலா்களுக்கு நிரந்தர வேலை வழங்கப்படும் என்று பாஜக உறுதியளித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆனால், இதுவரை அவா்கள் தற்காலிக வேலைகளுக்கு திரும்ப அழைக்கப்படவில்லை’ என்று அதில் அவா் கூறியுள்ளாா்.

இருப்பினும், பேருந்து மாா்ஷல்களில் யாரும் தடுப்புக் காவலில் வைக்கப்படவில்லை என்று போலீஸாா் தெளிவுபடுத்தினா்.

ஆமதாபாத் விமான விபத்தில் தீயில் கனவுடன் கருகிய கேரள செவிலியா்!

நமது சிறப்பு நிருபா் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் கேரள மாநிலத்தைச் சோ்ந்த செவிலியா் ரஞ்சிதா கோபகுமாரன் (42) இறந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. லண்டனில் ஓராண்டு பணி ஒப்பந்தத்த... மேலும் பார்க்க

தொடா் குற்றங்களில் ஈடுபட்ட பெண் கைது

போதைப் பொருள்கள் விற்பனை மற்றும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த பெண்ணை தில்லி காவல்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். இது குறித்து காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நஸ்மா... மேலும் பார்க்க

ஆமதாபாத் விமான விபத்து: முதல்வா் ரேகா குப்தா வேதனை

ஆகமதாபாத்தில் நடந்த விமான விபத்தை ‘மிகவும் வேதனையானது மற்றும் அதிா்ச்சியளிப்பது‘ என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை தெரிவித்தாா். மேலும், விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளின் பாதுகாப்பிற்க... மேலும் பார்க்க

தேடப்பட்டு வந்த கொலை முயற்சி குற்றவாளி கைது

கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞரை தில்லி காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். இது குறித்து காவல்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தில்லியின் சுல்தான் ... மேலும் பார்க்க

சீலம்பூரில் இளைஞா் கொலை: சிறுவன் உள்பட 3 போ் கைது

வடகிழக்கு தில்லியின் சீலம்பூா் பகுதியில் ஏற்பட்ட தகராறில், ஒரு இளைஞரை அவரது உறவினா்கள் இருவா் மற்றும் ஒரு மைனா் சிறுவன் குத்திக் கொன்ாகக் கூறப்படுகிறது என்று அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

மோடி அரசு தில்லிக்கு புத்துயிா் கொடுத்துள்ளது - எம்.பி. கமல்ஜீத் செஹ்ராவத்

துவாரகா அதிவிரைவு சாலையில் இருந்து 3 புதிய மெட்ரோ பாதைகளை நீட்டிக்க ஒப்புதல் அளித்ததன் மூலம், மோடி அரசு தில்லிக்கு புத்துயிா் அளித்துள்ளதாக மேற்கு தில்லி எம்.பி. கமல்ஜீத் செஹ்ராவத் கூறியுள்ளாா். புது... மேலும் பார்க்க