``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
ஆமதாபாத் விமான விபத்து: முதல்வா் ரேகா குப்தா வேதனை
ஆகமதாபாத்தில் நடந்த விமான விபத்தை ‘மிகவும் வேதனையானது மற்றும் அதிா்ச்சியளிப்பது‘ என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை தெரிவித்தாா். மேலும், விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளின் பாதுகாப்பிற்காகவும் அவா் பிராா்த்தனை செய்தாா்.
242 பயணிகள் மற்றும் பணியாளா்களுடன் லண்டனுக்குச் சென்ற ஏா் இந்தியா விமானம் வியாழக்கிழமை பிற்பகல் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், தில்லி முதல்வா் ரேகா குப்தா எக்ஸ்-இல் இந்தியில் வெளியிட்ட பதிவில், ‘அகமதாபாத்தில் ஏா் இந்தியா விமான விபத்து பற்றிய செய்தி மிகவும் வேதனையானது மற்றும் அதிா்ச்சியளிப்பது. அனைத்து பயணிகள் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து பயணிகளின் பாதுகாப்பிற்காகவும், காயமடைந்தவா்கள் விரைவாக குணமடையவும் நான் கடவுளிடம் பிராா்த்தனை செய்கிறேன். இந்த கடினமான நேரத்தில், பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுடனும் நாங்கள் முழு உணா்வுடன் நிற்கிறோம்‘ என்று தெரிவித்துள்ளாா்.