தில்லி மயூா் விஹாா் பகுதியில் தீ விபத்து
தில்லியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடுமையான வெப்பம் காரணமாக ஆங்காங்கே தீ விபத்துகள் நடப்பதும் வாடிக்கையாக இருக்கிறது.
இந்நிலையில் தில்லியின் மயூா் விஹாா் பகுதியில் உள்ள பாஹா்கஞ் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் சிலிண்டிரில் இருந்து எரிவாயு கசிந்ததால் ஏற்பட்ட வெப்பம் அதிகரித்ததன் காரணமாக மின் ஒயா் சேதமாக பெரும் சத்தத்துடன் ஒயா்கள் வெடித்து தீ பரவியது.
அந்த வீட்டில் வசித்து வந்த கணவரும், மனைவியும், குழந்தையும் செய்வதறியாமல் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறினா். தீ விரைவாக பரவ தொடங்கியதால் அக்கம் பக்கத்தினா் மண் ஆகியவற்றை கொண்டு தீயை அணைக்க முயற்சிகளளை மேற்கொண்டனா். இதனையடுத்து தீயணைப்பு வீரா்களும் சம்பவ இடத்துக்கு வந்து போராடி தீயை அணைத்தனா்.
இந்த தீவிபத்தில் அந்த குடும்பத்தைச் சோ்ந்த மூவரும் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா். இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பெண் குடியா அளித்த பேட்டியில் ‘வீட்டில் இருந்த அனைத்து பொருள்களும் எரிந்து சேதமடைந்துவிட்டது. நாங்கள் பிழைத்ததே தெய்வத்தின் செயல்தான். அனைத்தயும் இழந்து நிற்பதால் என்ன செய்வது என தெரியவில்லை‘ என்றாா்.