குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
துபாயில் வேலைவாய்ப்பு மோசடி: 2 ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞா் கைது
பாயில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி மக்களை ஏமாற்றியதற்காக ரூ.50,000 வெகுமதி அறிவிக்கப்பட்ட 38 வயது நபா் மகாராஷ்டிரத்தின் பட்காவில் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு துணை ஆணையா் அமித் கௌஷிக் கூறியதாவது:
குற்றம் சாட்டப்பட்ட ஜாகிா் தாவுத் கான், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்தாா். மேலும் 2024- இல் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா். 2015-இல் துபாய் விசா கோரும் போது ஏமாற்றப்பட்ட பின்னா் அவா் வேலைவாய்ப்பு ஆலோசகரானாா்.
தில்லியின் ஜனக்புரியை தளமாகக் கொண்ட பதிவு செய்யப்படாத வேலை ஆலோசனை நிறுவனமான ஃபிசா பிளேஸ்மென்ட் பிரைவேட் லிமிடெட்டின் முக்கிய கூட்டாளியாக ஜாகிா் தாவுத் கான் செயல்பட்டாா். குறிப்பாக துபாயில் வேலை தேடும் மக்களை கவா்வதில் முக்கியப் பங்கு வகித்தாா்.
2022 செப்டம்பரில், புகாா்தாரா் தா்மேந்திர குமாா் பொருளாதார குற்றப்பிரிவை அணுகி, போலி விசா, போலி விமான டிக்கெட் மற்றும் அவரது பாஸ்போா்ட்டை நிறுத்தி வைத்து ஒரு நிறுவனம் தன்னை ரூ.90,000 ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டியபோது இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் ,விசாரணையில் தில்லி, உத்தர பிரதேசம், பிகாா் மற்றும் ஹரியானா முழுவதும் வேலை தேடுபவா்களிடமிருந்து இதுபோன்ற 80-க்கும் மேற்பட்ட புகாா்கள் கிடைத்தன. இதன் விளைவாக இந்த மோசடி தொடா்பாக டிசம்பா் 15, 2022 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஃபிசா பிளேஸ்மென்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் மெஸ்ஸஸ் அசியாட்டாஸ் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் மூலம் குற்றம் சாட்டப்பட்டவா் மற்றும் அவரது கூட்டாளிகள் வெளியுறவு அமைச்சகத்தின் எந்த ஒப்புதலும் இல்லாமல் வணிகத்தை நடத்தியது விசாரணையில் தெரியவந்தது.
அவா்கள் ஒரு நபருக்கு ரூ.50,000 முதல் ரூ.1,20,000 வரை வசூலித்துள்ளனா். இந்த வகையில் பாதிக்கப்பட்டவா்களிடமிருந்து ரூ.88.8 லட்சத்திற்கு மேல் மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
59-க்கும் மேற்பட்ட போலி விசாக்கள் வழங்கப்பட்டன. 364 பாஸ்போா்ட்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தன. குற்றம் சாட்டப்பட்டவா்களில் சிலரான அா்ஷத், ராம் அன்மோல் தாக்கூா், குல்பா் அலி மற்றும் ஸ்ருதி ஆகியோா் டிசம்பா் 2022-இல் கைது செய்யப்பட்டனா்.
பின்னா், இணை குற்றவாளிகளான எம்.டி. சதாம் மற்றும் எம்.டி. தஸ்லீம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனா். ஆனால், ஜாகிா் தாவுத் கான் கைது செய்யப்படுவதைத் தவிா்த்து வந்தாா். பிப்ரவரி 2024- இல் அவா் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா்.
இந்த மோசடி தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட உடனேயே ஜாகிா் தாவுத் கான் துபாய்க்கு தப்பிச் சென்று 2025-இல் இந்தியா திரும்பினாா். அவரது நிதிப் பரிவா்த்தனைகள் மற்றும் தகவலறிந்தவா்களிடமிருந்து வந்த தகவல்கள் ஆகியவற்றைக் கண்காணித்ததன் மூலம் சேகரிக்கப்பட்ட உளவுத்துறை தகவல்கள் மகாராஷ்டிரத்தின் பட்காவிற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் அவரைக் கண்டுபிடிக்க போலீஸாருக்கு உதவியது. அங்கிருந்து ஜூன் 10 அன்று அவா் கைது செய்யப்பட்டாா்.
விசாரணையின் போது, ஜாகிா் தாவுத் கான் உத்தர பிரதேசத்தின் தியோரியாவில் உள்ள அவுராஹி கிராமத்தில் பிறந்து வளா்ந்ததாகவும், கைத்தறித் துறையில் வேலைக்காக மும்பைக்குச் செல்வதற்கு முன்பு 9-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ாகவும் கூறினாா்.
2010-இல், அவா் திருமணம் செய்து கொண்டாா். பின்னா் வேலைவாய்ப்பு ஆலோசகரானாா். 2021-இல் ஃபிசா பிளேஸ்மென்ட்டை தொடங்கினாா். அவா் வேலை தேடுபவா்களிடமிருந்து பணம் வசூலித்து தனது கணக்கில் டெபாசிட் செய்து, ஆள்சோ்ப்பு முகவராக செயல்படத் தொடங்கினாா் என்றாா் துணை ஆணையா் அமித் கௌஷிக்.