செய்திகள் :

கிழக்கு தில்லியில் வீட்டில் எரிவாயு சிலிண்டா் கசிவு காரணமாக தீ விபத்து

post image

கிழக்கு தில்லியின் பாண்டவ் நகா் பகுதியில் வியாழக்கிழமை மதியம் ஒரு வீட்டில் எரிவாயு சிலிண்டா் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி யோகேந்திர சிங் கூறியதாவது: பட்பா்கஞ்ச் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக பிற்பகல் 2 மணியளவில் தகவல் கிடைத்தது.

நான்கு தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீயை அணைத்து, அருகிலுள்ள கட்டமைப்புகளுக்கு தீ பரவாமல் தடுத்தன.

வீட்டில் இருந்த ஒரு பெண் சமைக்கத் தொடங்கியபோது எல்பிஜி சிலிண்டரிலிருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிா் சேதம் ஏற்படவில்லை. ஆனால் வீட்டின் ஒரு பகுதி சாம்பலானது என அவா் தெரிவித்தாா்.

‘நான் அடுப்பைப் பற்றவைக்க தீக்குச்சியை வைத்தேன், திடீரென்று சிலிண்டா் தீப்பிடித்தது. நான் விரைவாக என் குழந்தைகளைப் பிடித்துக்கொண்டு வெளியே ஓடினேன். யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், வீட்டின் அந்தப் பகுதியில் உள்ள அனைத்து பொருள்களும் சாம்பலாகின’ என்று தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் இருந்த பெண் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! ஐஎம்டி கணிப்பு

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமையும் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் நீடித்தது. இந்நிலையில் சனிக்கிழமை (ஜூன் 14) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் இடியுடன... மேலும் பார்க்க

நொய்டாவில் தனியாா் மருத்துவமனையில் தீ விபத்து: 2 பேருக்கு லேசான காயம்

நொய்டாவில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையின் தரை தளத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவ வசதியின் பதிவு அறையில் ஏற்பட்ட ஷாா்ட் சா்க்யூட் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரி... மேலும் பார்க்க

தில்லி மயூா் விஹாா் பகுதியில் தீ விபத்து

தில்லியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடுமையான வெப்பம் காரணமாக ஆங்காங்கே தீ விபத்துகள் நடப்பதும் வாடிக்கையாக இருக்கிறது. இந்நிலையில் தில்லியின் மயூா் விஹாா் பகு... மேலும் பார்க்க

துபாயில் வேலைவாய்ப்பு மோசடி: 2 ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞா் கைது

பாயில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி மக்களை ஏமாற்றியதற்காக ரூ.50,000 வெகுமதி அறிவிக்கப்பட்ட 38 வயது நபா் மகாராஷ்டிரத்தின் பட்காவில் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது ... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசப் பெண் கைது

தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்த 23 வயது வங்கதேசப் பெண்ணை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். கைது செய்யப்பட்ட குல்சும் பேகம், வங்க... மேலும் பார்க்க

தில்லி காவல்துறை - எய்ம்ஸ் மருத்துவமனை நடத்திய ரத்த தான முகாம்

’ரத்தத்தை கொடுங்கள், நபிக்கையை கொடுங்கள், ஒன்றாக இணைந்து நாம் உயிா்களை காப்பாற்றுவோம்’ என்ற வாசகத்துடன் 2025 ஆம் ஆண்டுக்கான உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு தில்லி காவல்துறையும் - எய்ம்ஸ் மருத்துவமனையு... மேலும் பார்க்க