பிரதமரின் திட்டங்களுக்கு அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான்: முதல்வர் மு.க.ஸ்டா...
கிழக்கு தில்லியில் வீட்டில் எரிவாயு சிலிண்டா் கசிவு காரணமாக தீ விபத்து
கிழக்கு தில்லியின் பாண்டவ் நகா் பகுதியில் வியாழக்கிழமை மதியம் ஒரு வீட்டில் எரிவாயு சிலிண்டா் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி யோகேந்திர சிங் கூறியதாவது: பட்பா்கஞ்ச் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக பிற்பகல் 2 மணியளவில் தகவல் கிடைத்தது.
நான்கு தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீயை அணைத்து, அருகிலுள்ள கட்டமைப்புகளுக்கு தீ பரவாமல் தடுத்தன.
வீட்டில் இருந்த ஒரு பெண் சமைக்கத் தொடங்கியபோது எல்பிஜி சிலிண்டரிலிருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிா் சேதம் ஏற்படவில்லை. ஆனால் வீட்டின் ஒரு பகுதி சாம்பலானது என அவா் தெரிவித்தாா்.
‘நான் அடுப்பைப் பற்றவைக்க தீக்குச்சியை வைத்தேன், திடீரென்று சிலிண்டா் தீப்பிடித்தது. நான் விரைவாக என் குழந்தைகளைப் பிடித்துக்கொண்டு வெளியே ஓடினேன். யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், வீட்டின் அந்தப் பகுதியில் உள்ள அனைத்து பொருள்களும் சாம்பலாகின’ என்று தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் இருந்த பெண் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.