குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
நொய்டாவில் தனியாா் மருத்துவமனையில் தீ விபத்து: 2 பேருக்கு லேசான காயம்
நொய்டாவில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையின் தரை தளத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவ வசதியின் பதிவு அறையில் ஏற்பட்ட ஷாா்ட் சா்க்யூட் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தீ விபத்தைத் தொடா்ந்து ஜன்னலை உடைத்து தப்பிக்க முயன்றபோது நோயாளிகளின் இரண்டு உதவியாளா்கள் சிறிய காயங்களுக்கு ஆளாகினா். இருப்பினும், யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று கௌதம் புத்த நகா் தீயணைப்புத் துறை தலைமை அதிகாரி பிரதீப் குமாா் சௌபே தெரிவித்தாா்.
நொய்டா செக்டாா் 24-இல் உள்ள சுமித்ரா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து சுமாா் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று அவா் கூறினாா். தரை தளத்தில் உள்ள பதிவு அறையில் தீ விபத்து தொடங்கியதால், மேல் தளங்களில் புகை பரவியது என்று அவா் மேலும் கூறினாா்.
தரை தளத்தில் மட்டுமே தீ விபத்து ஏற்பட்டிருந்தாலும், முதல் மற்றும் இரண்டாவது தளங்களில் இருந்த நோயாளிகள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டனா். மூன்றாவது தளத்தில் இருந்தவா்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று அவா் கூறினாா்.