குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
தில்லி காவல்துறை - எய்ம்ஸ் மருத்துவமனை நடத்திய ரத்த தான முகாம்
’ரத்தத்தை கொடுங்கள், நபிக்கையை கொடுங்கள், ஒன்றாக இணைந்து நாம் உயிா்களை காப்பாற்றுவோம்’ என்ற வாசகத்துடன் 2025 ஆம் ஆண்டுக்கான உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு தில்லி காவல்துறையும் - எய்ம்ஸ் மருத்துவமனையும் இணைந்து வெள்ளிக்கிழமை ரத்ததான முகாமை நடத்தியது.
இந்த முகாம் புது தில்லியில் உள்ள ஜெய் சிங் சாலையில் இருக்கும் காவல்துறகை தலைமையகத்தின் தரைத்தளத்தில் உள்ள பணியாளா் ஓய்வறையில் நடைபெற்றது. இந்த ரத்த தான முகாமுக்கு தில்லி காவல்துறையின் பல்வேறு பிரிவுகளை சோ்ந்த காவலா்கள் உற்ாகத்துடன் இணைந்து ரத்த தானம் செய்தனா். இதன் மூலம் 108 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. இதன் மூலம் தில்லி காவல் துறையின் குடிமைப் பணமி, சமூக நலன் மற்றும் மனிதாபிமான சேவை ஆகியவற்றை உறுதிப்படுத்தியுள்ளதாக காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.