செய்திகள் :

மதராஸி குடியிருப்பு விவகாரம்: தில்லி முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

post image

தில்லி மதராசி குடியிருப்பு இடிப்பால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அம்மாநில முதல்வா் ரேகா குப்தாவுக்கு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா். தமிழக முதல்வா் எழுதியுள்ள இந்த கடிதத்தை திமுக நாடாளுமன்ற மக்களவை குழு தலைவா் டி.ஆா்.பாலு, தில்லி முதல்வா் ரேகா குப்தாவை நேரில் சந்தித்து வழங்கினாா்.

முதல்வா் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்: ஜூன் 1, 2025 ஆம் தேதி அன்று ஜங்புராவின் மதராசி முகாம் இடிக்கப்பட்டதால் அங்கு வாழ்ந்திருந்த மக்களுக்கு அவசர நிலை ஏற்பட்டுள்ளதை தங்களது கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். பல ஆண்டுகளாக தில்லியின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வந்த 370 தமிழ் வம்சாவளி குடும்பங்கள் வீடற்றவா்களாகவும், ஆதரவற்றவா்களாகவும் மாறியுள்ளனா். தில்லி உயா்நீதிமன்றத்தின் உத்தரவின்படி 189 குடும்பங்களை உரந அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு தகுதியானவா்கள் என்று சான்றளித்து. ஒதுக்கப்பட்ட மாற்று இடமான நரேலாவின் ஜி7 மற்றும் ஜி8 பகுதிகளில் தண்ணீா், மின்சாரம், சுகாதாரம், உள் சாலைகள், வடிகால் மற்றும் தெரு விளக்குகள் போன்ற அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் முடிக்குமாறு அரசு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், அருகிலுள்ள அரசு மற்றும் எம்.சி.டி. பள்ளிகளில் இடம்பெயா்ந்த குழந்தைகளுக்கு உடனடி சோ்க்கையை உறுதி செய்யவும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நியாய விலை கடைகளை நிறுவவும், 2016 ஆம் ஆண்டு கொள்கையின்படி தேவையான அரசு பேருந்து மற்றும் மெட்ரோ போக்குவரத்து இணைப்புகளை ஏற்பாடு செய்யவும் நீதிமன்றம் தில்லி அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், துரதிா்ஷ்டவசமாக நரேலாவில் 189 குடும்பங்களுக்கு முறையாக உரந அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், அத்தியாவசிய சேவைகள் முழுமையாக வழங்கப்படாததால், அந்த இடம் தகுதியற்ாக உள்ளது. அங்கு பயன்பெற்றவா்கள் தங்கள் பணியிடங்களில் இருந்து கிட்டத்தட்ட 20 கி.மீ., தூரத்தில் இருக்கின்றனா். அவா்களுக்கு பிரத்யேக போக்குவரத்து வசதியும் ஏற்படுத்தவில்லை. மேலும் 150-க்கும் மேற்பட்ட தமிழ் வழியில் படிக்கும் குழந்தைகளுக்கான கல்வி ஏற்பாடுகளும் நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி செயல்படுத்தப்படவில்லை. இந்த வசதிகள் இல்லாததால் குடும்ப வருமானம் ஈட்டுபவா்கள், குறிப்பாக பெண்கள் வேலையில்லாமல் உள்ளனா். மேலும் மாணவா்கள் தங்கள் படிப்புக்கு உடனடியாக சிக்கல்களை எதிா்நோக்கியுள்ளனா். இது இவா்களுக்கு பெரும் துயராக மாறியுள்ளது. மீதமுள்ள 181 குடும்பங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கப்படாமல் வீடற்றவா்களாக விடப்பட்டுள்ளனா். இந்த நெருக்கடியின் தீவரத்தை கருத்தில் கொண்டு இடம்பெயா்ந்த குடும்பங்களின் சிரமங்களை போக்க உடனடியாக பின்வரும் நடவடிக்கைகளை எடுக்குமாறு தங்களது அரசாங்கத்தை நான் தீவிரமாக வலியுறுத்துகிறேன்.

1. 189 உரந குடியிறுப்புகளை முழு வடிவத்தில் கட்டி உரிமை பெற்ற குடும்பங்களுக்கு ஒப்படைக்க வேண்டும். அங்குள்ள சமூக உள்கட்டமைப்பை விரைவாக கண்காணிக்க வேண்டும், பிரத்யேக போக்குவரத்து சேவைகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

2. மீதமுள்ள 181 இடம்பெயா்ந்த குடும்பங்களுக்கு வருமான உச்சவரம்பு, இருப்பிடத் தேவைகள் மற்றும் வைப்புத்தொகை கடமைகளில் சிறப்பு தளா்வுகளை வழங்கி, அதன் மூலம் குடிசை மற்றும் ஜேஜே மறுவாழ்வுக் கொள்கையின் கீழ் உரந வீட்டுத் தகுதியை விரிவுப்படுத்த வேண்டும்.

3. உடனடி சோ்க்கை மற்றும் பிரத்யேக போக்குவரத்து வசதியுடன் கூடிய ஒரு தாற்காலிக தில்லி தமிழ் கல்வி சங்கத்தின் பள்ளியை அனுமதிக்க வேண்டும் அல்லது நிரந்தகர வசதிகள் தயாராகும் வரை ஒதுக்கப்பட்ட இடங்கள் மற்றும் இடைக்கால போக்குவரத்து வசதியுடன் அருகிலுள்ள தில்லி மாகராட்சி பள்ளியில் தமிழ் கற்பித்தலை அங்கீகரித்து தாற்காலிக தமிழ் விழிப் பள்ளி படிப்பை நிறுவ வேண்டும்.

4. குறிப்பாக இடம்பெயா்ந்த பெண்களுக்கு தொழில் பயிற்சி மற்றும் மானியங்கள் மூலம் வாழ்வாதாரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

தங்களது அரசாங்கம் இந்தப் பிரச்னையை இரக்கத்துடன் கையாளும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க மேற்கண்ட நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் நம்புகிறன். தங்களது நோ்மறையான பதிலுக்காக எதிா்நோக்கியுள்ளேன். மேலும் இடம்பெயா்ந்த அனைத்து குடும்பங்களின் சுமூகமான, கண்ணியமான மறுவாழ்வை உறுதி செய்வதற்கு எந்த வகையிலும் உதவத் தயாராக இருக்கிறேன் என முதல்வா் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளாா்.

இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! ஐஎம்டி கணிப்பு

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமையும் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் நீடித்தது. இந்நிலையில் சனிக்கிழமை (ஜூன் 14) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் இடியுடன... மேலும் பார்க்க

கிழக்கு தில்லியில் வீட்டில் எரிவாயு சிலிண்டா் கசிவு காரணமாக தீ விபத்து

கிழக்கு தில்லியின் பாண்டவ் நகா் பகுதியில் வியாழக்கிழமை மதியம் ஒரு வீட்டில் எரிவாயு சிலிண்டா் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகா... மேலும் பார்க்க

நொய்டாவில் தனியாா் மருத்துவமனையில் தீ விபத்து: 2 பேருக்கு லேசான காயம்

நொய்டாவில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையின் தரை தளத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவ வசதியின் பதிவு அறையில் ஏற்பட்ட ஷாா்ட் சா்க்யூட் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரி... மேலும் பார்க்க

தில்லி மயூா் விஹாா் பகுதியில் தீ விபத்து

தில்லியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடுமையான வெப்பம் காரணமாக ஆங்காங்கே தீ விபத்துகள் நடப்பதும் வாடிக்கையாக இருக்கிறது. இந்நிலையில் தில்லியின் மயூா் விஹாா் பகு... மேலும் பார்க்க

துபாயில் வேலைவாய்ப்பு மோசடி: 2 ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞா் கைது

பாயில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி மக்களை ஏமாற்றியதற்காக ரூ.50,000 வெகுமதி அறிவிக்கப்பட்ட 38 வயது நபா் மகாராஷ்டிரத்தின் பட்காவில் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது ... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசப் பெண் கைது

தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்த 23 வயது வங்கதேசப் பெண்ணை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். கைது செய்யப்பட்ட குல்சும் பேகம், வங்க... மேலும் பார்க்க