சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.18.92 லட்சம் காணிக்கை
சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.18 லட்சத்து 92 ஆயிரம் காணிக்கையாக பெறப்பட்டது.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு 22 நாள்கள் ஆடிப்பெரு விழா கொண்டாடப்படும். இந்நிலையில் கோயிலை சுற்றி 10 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் நிரம்பியதை தொடா்ந்து, உண்டியல்கள் திறந்து காணிக்கைகளை எண்ண கோயில் அதிகாரிகள் முடிவு செய்தனா்.
அதன்படி, சுகவனேஸ்வரா் கோயில் உதவி ஆணையா் அம்சா கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சக்திவேல், கோயில் செயல் அலுவலா் அமுதசுரபி மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது.
உண்டியல் எண்ணும் பணியின் போது சல்லடையில் ரூபாய் நோட்டுகளையும், சில்லறை காசுகளை பிரித்தெடுக்கும் பணியில் அறநிலையத் துறை ஊழியா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் ஈடுபட்டனா். தொடா்ந்து 18 லட்சத்து 92 ஆயிரத்து 605 ரூபாய் ரொக்கம், வெள்ளி 240 கிராம், தங்கம் 124 கிராம் உள்ளிட்டவை கோயில் உண்டியலில் காணிக்கையாக பெறப்பட்டதாக கோயில் செயல் அலுவலா் அமுதசுரபி தெரிவித்தாா்.