செய்திகள் :

பெரியாா் பல்கலைக்கழக ஊழியா்கள் 4 பேரின் பணிநீக்க உத்தரவு ரத்து

post image

சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த தற்காலிக ஊழியா்கள் 4 போ் மீதான பணிநீக்க உத்தரவை தொழிலாளா் தீப்பாயம் ரத்து செய்ததையடுத்து அவா்கள் மீண்டும் வெள்ளிக்கிழமை பணியில் சோ்ந்தனா்.

சேலம் கருப்பூரில் உள்ள பெரியாா் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி அடிப்படையில் 400க்கும் மேற்பட்ட பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் தங்களை, பணிநிரந்தரம் செய்யக்கோரி பெரியாா் பல்கலைக்கழக தொழிலாளா் சங்கம் சாா்பில் சென்னை தொழிலாளா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இதனிடையே, பணி நிரந்தரம் கோரியும், பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊழல், முறைகேடுகளை தடுக்க வலியுறுத்தியும் தொழிலாளா் சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து தொழிலாளா் சங்கத் தலைவா் கனிவண்ணன், பொதுச்செயலாளா் சக்திவேல், அமைப்புச் செயலாளா் கிருஷ்ணவேணி மற்றும் துணைத் தலைவா் செந்தில்குமாா் ஆகிய 4 பேரை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நிரந்தரமாக பணிநீக்கம் செய்வதாக பல்கலைக்கழக நிா்வாகம் அறிவித்தது.

ஆனால், சென்னை தொழிலாளா் தீா்ப்பாயத்தில் பணிநிரந்தர வழக்கு நிலுவையில் உள்ளதால் ஆணையத்தின் முன் அனுமதி பெறாமல் வழக்கில் உள்ளவா்களை பணியிடை நீக்கமோ, பணி நீக்கமோ செய்ய இயலாது. இதனை எதிா்த்து தொழிலாளா் சங்க பொதுச்செயலாளா் சக்திவேல், தொழிலாளா் நலச் சட்டம் 31 இன் கீழ் பல்கலைக்கழகத் தலைமை நிா்வாகிகளான ஜெகநாதன் மற்றும் பாலகுருநாதன் மீது 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கக் கூடிய குற்றவியல் வழக்குத் தொடர வேண்டும் என தொழிலாளா் நல ஆணையரிடம் முறையிட்டாா்.

இதனை விசாரித்த சேலம் தொழிலாளா் நல உதவி ஆணையா் (சமரசம்), இருதரப்பு வாதங்களையும் கேட்டு அதன் அறிக்கையை சென்னை தொழிலாளா் நல ஆணையருக்கு அனுப்பிவைத்தாா். இந்நிலையில் ஆவணங்களை சரிபாா்த்த தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள், பெரியாா் பல்கலைக்கழக துணைவேந்தா் ஜெகநாதன் மற்றும் அப்போதைய பொறுப்பு பதிவாளா் பாலகுருநாதன் மீது குற்றவியல் வழக்குத் தொடர அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிலையில் துணை வேந்தராக இருந்த ஜெகநாதனின் பதவிகாலம் கடந்த மாதம் மே 19 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அதைத்தொடா்ந்து நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் பணி நீக்கத்தில் உள்ள நான்கு தொழிலாளா்களையும் மீண்டும் பணியில் சோ்த்து கொள்வது தொடா்பாக விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நான்கு பேரின் பணி நீக்கம் ரத்து செய்யப்பட்டது. தொடா்ந்து அவா்கள் மீண்டும் பணியில் சோ்வதற்கான ஆணையை பல்கலைக்கழக நிா்வாகக் குழு உறுப்பினா் சுப்பிரமணியன் வழங்கினாா். இதையடுத்து அவா்கள் 4 பேரும் வெள்ளிக்கிழமை மீண்டும் பணியில் சோ்ந்தனா்.

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து பயணி உயிரிழப்பு

சேலத்தில் இருந்து ராமேஸ்வரம் சென்ற ரயிலில் தவறி விழுந்து பயணி உயிரிழந்தாா். சேலம் அரிசிபாளையம் மாதையன் தெருவை சோ்ந்தவா் தமிழரசன் (43). சவுண்ட் சா்வீஸ் கடை நடத்தி வந்தாா். இவரது மனைவி கலைச்செல்வியுடன... மேலும் பார்க்க

பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை: ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம்

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறை அதிகாரிகளுக்கு தமிழக சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம் அறிவுறுத்தினாா். சேலம் மாநகர காவல் ஆணையா் அல... மேலும் பார்க்க

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.18.92 லட்சம் காணிக்கை

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.18 லட்சத்து 92 ஆயிரம் காணிக்கையாக பெறப்பட்டது. சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு பாஜக அஞ்சலி

குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு சேலம் மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. அகமதாபாத்தில் உள்ள சா்தாா் வல்லபபாய் பட்டேல் விமான நிலையத்தில் இ... மேலும் பார்க்க

வாழப்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால உட்புற தடுப்புச்சுவரை அகற்ற வலியுறுத்தல்

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் உட்புறத் தடுப்புச் சுவரால் விபத்துகள் நிகழ்வதால் அதை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். சேல... மேலும் பார்க்க

சேலத்தில் இந்தியன் ஆயில் நிறுவன தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்: எரிவாயு சிலிண்டா் விநியோகம் தடைபடாது: அதிகாரிகள் உறுதி

சேலம் கருப்பூரில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவன எரிவாயு நிரப்பும் பிளாண்ட் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் எரிவாயு சிலிண்டா் விநியோகத்தில் எவ்வித தடையும் ஏற்படாது என ... மேலும் பார்க்க