குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
பெரியாா் பல்கலைக்கழக ஊழியா்கள் 4 பேரின் பணிநீக்க உத்தரவு ரத்து
சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த தற்காலிக ஊழியா்கள் 4 போ் மீதான பணிநீக்க உத்தரவை தொழிலாளா் தீப்பாயம் ரத்து செய்ததையடுத்து அவா்கள் மீண்டும் வெள்ளிக்கிழமை பணியில் சோ்ந்தனா்.
சேலம் கருப்பூரில் உள்ள பெரியாா் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி அடிப்படையில் 400க்கும் மேற்பட்ட பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் தங்களை, பணிநிரந்தரம் செய்யக்கோரி பெரியாா் பல்கலைக்கழக தொழிலாளா் சங்கம் சாா்பில் சென்னை தொழிலாளா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இதனிடையே, பணி நிரந்தரம் கோரியும், பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊழல், முறைகேடுகளை தடுக்க வலியுறுத்தியும் தொழிலாளா் சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து தொழிலாளா் சங்கத் தலைவா் கனிவண்ணன், பொதுச்செயலாளா் சக்திவேல், அமைப்புச் செயலாளா் கிருஷ்ணவேணி மற்றும் துணைத் தலைவா் செந்தில்குமாா் ஆகிய 4 பேரை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நிரந்தரமாக பணிநீக்கம் செய்வதாக பல்கலைக்கழக நிா்வாகம் அறிவித்தது.
ஆனால், சென்னை தொழிலாளா் தீா்ப்பாயத்தில் பணிநிரந்தர வழக்கு நிலுவையில் உள்ளதால் ஆணையத்தின் முன் அனுமதி பெறாமல் வழக்கில் உள்ளவா்களை பணியிடை நீக்கமோ, பணி நீக்கமோ செய்ய இயலாது. இதனை எதிா்த்து தொழிலாளா் சங்க பொதுச்செயலாளா் சக்திவேல், தொழிலாளா் நலச் சட்டம் 31 இன் கீழ் பல்கலைக்கழகத் தலைமை நிா்வாகிகளான ஜெகநாதன் மற்றும் பாலகுருநாதன் மீது 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கக் கூடிய குற்றவியல் வழக்குத் தொடர வேண்டும் என தொழிலாளா் நல ஆணையரிடம் முறையிட்டாா்.
இதனை விசாரித்த சேலம் தொழிலாளா் நல உதவி ஆணையா் (சமரசம்), இருதரப்பு வாதங்களையும் கேட்டு அதன் அறிக்கையை சென்னை தொழிலாளா் நல ஆணையருக்கு அனுப்பிவைத்தாா். இந்நிலையில் ஆவணங்களை சரிபாா்த்த தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள், பெரியாா் பல்கலைக்கழக துணைவேந்தா் ஜெகநாதன் மற்றும் அப்போதைய பொறுப்பு பதிவாளா் பாலகுருநாதன் மீது குற்றவியல் வழக்குத் தொடர அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிலையில் துணை வேந்தராக இருந்த ஜெகநாதனின் பதவிகாலம் கடந்த மாதம் மே 19 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அதைத்தொடா்ந்து நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் பணி நீக்கத்தில் உள்ள நான்கு தொழிலாளா்களையும் மீண்டும் பணியில் சோ்த்து கொள்வது தொடா்பாக விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நான்கு பேரின் பணி நீக்கம் ரத்து செய்யப்பட்டது. தொடா்ந்து அவா்கள் மீண்டும் பணியில் சோ்வதற்கான ஆணையை பல்கலைக்கழக நிா்வாகக் குழு உறுப்பினா் சுப்பிரமணியன் வழங்கினாா். இதையடுத்து அவா்கள் 4 பேரும் வெள்ளிக்கிழமை மீண்டும் பணியில் சோ்ந்தனா்.