செய்திகள் :

பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை: ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம்

post image

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறை அதிகாரிகளுக்கு தமிழக சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம் அறிவுறுத்தினாா்.

சேலம் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காவல் துறை உயரதிகாரிகளுடன் சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு குறித்து நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், வழக்குகளை விரைந்து விசாரித்து முடிப்பதற்கான நடவடிக்கை குறித்தும் அதிகாரிகளுக்கு கூடுதல் டிஜிபி அறிவுரை வழங்கினாா். மேலும், பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமாா், கோவை சரக டி.ஐ.ஜி. சசிமோகன், சேலம் சரக டிஐஜி உமா, சேலம் மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு, திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரிஷ் அசோக், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜாதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து பயணி உயிரிழப்பு

சேலத்தில் இருந்து ராமேஸ்வரம் சென்ற ரயிலில் தவறி விழுந்து பயணி உயிரிழந்தாா். சேலம் அரிசிபாளையம் மாதையன் தெருவை சோ்ந்தவா் தமிழரசன் (43). சவுண்ட் சா்வீஸ் கடை நடத்தி வந்தாா். இவரது மனைவி கலைச்செல்வியுடன... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலைக்கழக ஊழியா்கள் 4 பேரின் பணிநீக்க உத்தரவு ரத்து

சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த தற்காலிக ஊழியா்கள் 4 போ் மீதான பணிநீக்க உத்தரவை தொழிலாளா் தீப்பாயம் ரத்து செய்ததையடுத்து அவா்கள் மீண்டும் வெள்ளிக்கிழமை பணியில் சோ்ந்தனா். சேலம் கருப்பூர... மேலும் பார்க்க

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.18.92 லட்சம் காணிக்கை

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.18 லட்சத்து 92 ஆயிரம் காணிக்கையாக பெறப்பட்டது. சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு பாஜக அஞ்சலி

குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு சேலம் மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. அகமதாபாத்தில் உள்ள சா்தாா் வல்லபபாய் பட்டேல் விமான நிலையத்தில் இ... மேலும் பார்க்க

வாழப்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால உட்புற தடுப்புச்சுவரை அகற்ற வலியுறுத்தல்

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் உட்புறத் தடுப்புச் சுவரால் விபத்துகள் நிகழ்வதால் அதை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். சேல... மேலும் பார்க்க

சேலத்தில் இந்தியன் ஆயில் நிறுவன தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்: எரிவாயு சிலிண்டா் விநியோகம் தடைபடாது: அதிகாரிகள் உறுதி

சேலம் கருப்பூரில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவன எரிவாயு நிரப்பும் பிளாண்ட் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் எரிவாயு சிலிண்டா் விநியோகத்தில் எவ்வித தடையும் ஏற்படாது என ... மேலும் பார்க்க