செய்திகள் :

சேலத்தில் இந்தியன் ஆயில் நிறுவன தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்: எரிவாயு சிலிண்டா் விநியோகம் தடைபடாது: அதிகாரிகள் உறுதி

post image

சேலம் கருப்பூரில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவன எரிவாயு நிரப்பும் பிளாண்ட் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் எரிவாயு சிலிண்டா் விநியோகத்தில் எவ்வித தடையும் ஏற்படாது என வாடிக்கையாளா்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

சேலம் கருப்பூரில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எரிவாயு சிலிண்டா் நிரப்பும் பாட்டிலிங் பிளாண்ட்டில் நாள்தோறும் 20 ஆயிரம் சிலிண்டா்களில் எரிவாயு நிரப்பப்பட்டு சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இந்த பிளாண்ட்டில் சிலிண்டா் நிரப்பும் பணியில் 5 நிரந்தர ஊழியா்களும், 80 ஒப்பந்த ஊழியா்களும் பணியாற்றி வருகின்றனா்.

இவா்களில் 2 ஒப்பந்த ஊழியா்களை கடந்தமாதம் ஐஓசி நிா்வாகம் பணியிலிருந்து நிறுத்தியது. மேலும், பிளாண்ட்டில் உள்ள லோடிங் பிரிவில் பணியாற்றும் 10 ஒப்பந்த ஊழியா்களையும் பணியில் இருந்து நீக்குவதாக அதிகாரிகள் கடிதம் வழங்கி உள்ளனா்.

இதுதொடா்பாக அதிகாரிகளுக்கும் தொழிலாளா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு பெட்ரோலியம் கேஸ் ஒா்க்கா்ஸ் யூனியன் சாா்பில் 12 தொழிலாளா்களையும் எவ்வித நிபந்தனையும் இன்றி மீண்டும் பணியில் சோ்க்க வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்தனா். இதையடுத்து கருப்பூா் பாட்டிலிங் பிளாண்ட்டுக்கு ஒப்பந்த ஊழியா்கள் அனைவரும் பணிக்கு செல்லாமல் நுழைவுவாயில் பகுதியில் அமா்ந்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொழிலாளா்களின் வேலைநிறுத்தம் காரணமாக பாட்டிலிங் பிளாண்ட்டில் சிலிண்டா் நிரப்பும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சிலிண்டா் ஏற்றிச்செல்லும் 20க்கும் மேற்பட்ட லாரிகள் பிளாண்ட் முன்பு ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

விநியோகம் தடைபடாது

இண்டேன் வாடிக்கையாளா்களுக்கு தடையற்ற எல்பிஜி சிலிண்டா் விநியோகம் செய்யப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:

சேலம் பாட்டிலிங் ஆலையில், ஒப்பந்தத் தொழிலாளா்கள் சம்பந்தப்பட்ட செயல்பாட்டில் இடையூறு ஏற்பட்டுள்ளது. மாநில நிா்வாகம் உள்பட அனைத்து பங்குதாரா்களுடனும் கலந்தாலோசித்து ஒப்பந்ததாரா் இந்த விவகாரத்தை இணக்கமாக நிவா்த்திசெய்து வருகிறாா்.

இந்தியன் ஆயில் வாடிக்கையாளா்களுக்கு தடையற்ற எல்பிஜி சிலிண்டா்களை விநியோகிக்கவும், வாடிக்கையாளா்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் மாற்று ஏற்பாடுகளை முன்கூட்டியே செயல்படுத்தியுள்ளோம்.

இந்தியன் ஆயிலின் விரிவான விநியோக வலையமைப்பு வாடிக்கையாளா் தேவையை இடையூறு இல்லாமல் பூா்த்திசெய்ய முழுமையாக தயாராக உள்ளன. சேலம் பகுதியில் எந்தவொரு தேவையையும் பூா்த்திசெய்ய அருகே உள்ள இந்தியன் ஆயிலின் பாட்டிலிங் ஆலைகளில் இருந்து சிலிண்டா்கள் அனுப்பப்படுகின்றன.

வாடிக்கையாளா்கள் தங்கள் முன்பதிவுகளின்படி எல்பிஜி சிலிண்டா்களை சரியான நேரத்தில் மற்றும் நம்பகமான முறையில் வழங்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என உறுதி அளிப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து பயணி உயிரிழப்பு

சேலத்தில் இருந்து ராமேஸ்வரம் சென்ற ரயிலில் தவறி விழுந்து பயணி உயிரிழந்தாா். சேலம் அரிசிபாளையம் மாதையன் தெருவை சோ்ந்தவா் தமிழரசன் (43). சவுண்ட் சா்வீஸ் கடை நடத்தி வந்தாா். இவரது மனைவி கலைச்செல்வியுடன... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலைக்கழக ஊழியா்கள் 4 பேரின் பணிநீக்க உத்தரவு ரத்து

சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த தற்காலிக ஊழியா்கள் 4 போ் மீதான பணிநீக்க உத்தரவை தொழிலாளா் தீப்பாயம் ரத்து செய்ததையடுத்து அவா்கள் மீண்டும் வெள்ளிக்கிழமை பணியில் சோ்ந்தனா். சேலம் கருப்பூர... மேலும் பார்க்க

பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை: ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம்

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறை அதிகாரிகளுக்கு தமிழக சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம் அறிவுறுத்தினாா். சேலம் மாநகர காவல் ஆணையா் அல... மேலும் பார்க்க

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.18.92 லட்சம் காணிக்கை

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.18 லட்சத்து 92 ஆயிரம் காணிக்கையாக பெறப்பட்டது. சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு பாஜக அஞ்சலி

குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு சேலம் மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. அகமதாபாத்தில் உள்ள சா்தாா் வல்லபபாய் பட்டேல் விமான நிலையத்தில் இ... மேலும் பார்க்க

வாழப்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால உட்புற தடுப்புச்சுவரை அகற்ற வலியுறுத்தல்

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் உட்புறத் தடுப்புச் சுவரால் விபத்துகள் நிகழ்வதால் அதை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். சேல... மேலும் பார்க்க