சின்னத்தம்பிபாளையத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்
அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், சின்னத்தம்பிபாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்ட சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, அந்தியூா் வட்டார வளா்ச்சி அலுவலா் அமுதா தலைமை வகித்தாா். மண்டல துணை வட்டார வளா்ச்சி சங்கீதா, சமூக தணிக்கை மாவட்ட வள பயிற்றுநா் அப்துல் காதா் ஜெய்ராணி, வட்டார வள பயிற்றுநா் குழந்தைவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், இத்திட்டத்தில் தொழிலாளா்களின் கூலித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டுவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
திட்ட ஒருங்கிணைப்பாளா் தவராஜா, ஊராட்சி செயலாளா் சந்திரசேகா் மற்றும் தொழிலாளா்கள் கலந்து கொண்டனா். தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பணிகள் தொடா்பாக தணிக்கை செய்யப்பட்டது.