செய்திகள் :

குஜராத் விமான விபத்து! உயிர்த் தப்பிய விடுதி மாணவர்கள் கலக்கம்!

post image

அகமதாபாத் விமான விபத்தில் பாதிக்கப்பட்ட விடுதியில் இருந்த மாணவர்கள் வெளியேறி வருகின்றனர்.

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான மருத்துவ விடுதி மாணவர்களுக்கும் இழப்பீடு வழங்குமாறு இந்திய மருத்துவக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதனிடையே, தங்கள் விடுதியின் மேல் விமானம் மோதிய விபத்தால் அச்சமடைந்த விடுதி மாணவர்கள், விடுதியைவிட்டு வெளியேறி வருகின்றனர்.

மரணத்தை கண்முன்னே பார்த்ததால், தற்போது விடுதியைவிட்டு கலக்கத்துடன் வெளியேறுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். வெளியேறி வருபவர்கள் அனைவரும், விபத்தின்போது சிறு காயங்களுடன் உயிர்த் தப்பியது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்தோரின் குடும்பத்தினர்

ஜூன் 12ஆம் தேதி அகமதாபாதிலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், விமான நிலையத்துக்கு அருகே விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் பலியாகினர்.

பலியானவர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என ஏர் இந்தியாவின் டாடா குழுமம் அறிவித்திருந்தது.

ஏர் இந்தியா விமானம், பிஜே மருத்துவக் கல்லூரியின் குடியிருப்புப் பகுதிக்குள் விழுந்ததில், அங்கிருந்த மாணவர் விடுதி கடும் சேதமடைந்தது. அதிலிருந்த 7 மருத்துவ மாணவர்கள் பலியாகினர்.

மேலும், விடுதியில் மாணவர்கள், பேராசியர்களுக்காக உணவு சமைத்துக் கொண்டிருந்த ஷர்லாபென் தாக்கூர் என்ற பெண்ணும், அவரது 2 வயது பேத்தியும் விமான விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் இருவரின் உடல்களையும், ஷர்லாபெனின் மகன் தேடி வருகிறார்.

இதையும் படிக்க:குஜராத் விமான விபத்து விசாரணைக்கு 3 மாத கால அவகாசம்! மத்திய அமைச்சர் உறுதி!

காப்பீடு தொகைக்கான நடைமுறையை எளிமைப்படுத்திய நிறுவனங்கள்!

அகமதாபாத் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவா்கள், அவா்களுக்கான காப்பீடு தொகையைப் பெறுவதற்கான நடைமுறையை எளிமைப்படுத்தியுள்ளதாக எஸ்பிஐ-லைஃப், ஹெச்டிஎஃப்சி லைஃப், ஐசிஐசிஐ லோம்பாா்ட் உள்ளிட்ட காப்பீடு நிறுவன... மேலும் பார்க்க

சிங்கப்பூா் கப்பலில் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்ட தீ: 6-ஆவது நாளாக தொடரும் மீட்புப் பணி

கேரள கடற்பகுதியில் சிங்கப்பூா் கப்பலில் ஏற்பட்ட தீ பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டதாக இந்திய கடலோரக் காவல் படை சனிக்கிழமை தெரிவித்தது. இந்தக் கப்பல் கடற்கரையை நெருங்காமல் கடலை நோக்கி நகா்த்தும் பணியில்... மேலும் பார்க்க

ஓட்டுநா் பெட்டியில் குரல் பதிவு அமைப்பு: ரயில் பாதுகாப்புக் குழு பரிந்துரை!

ரயில் ஓட்டுநா் பெட்டியில் குரல் பதிவு அமைப்பை நிறுவுவது உள்பட பல்வேறு பரிந்துரைகளை ரயில் பாதுகாப்புக்குழு ரயில்வே அமைச்சகத்திடம் சமா்ப்பித்தது. பிகாா் மாநிலம் பக்ஸா் மாவட்டத்தில் கடந்த 2023, அக்.11-இல... மேலும் பார்க்க

விமான எண் ‘171’-ஐ நீக்க ஏா் இந்தியா முடிவு!

விமான எண் ‘171’-ஐ பயன்பாட்டில் இருந்து நீக்க ஏா் இந்தியா மற்றும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் முடிவெடுத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. டாடா குழுமத்தின் ஏா்இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட அடில் ஹுசைனின் மனைவிக்கு அரசுப் பணி!

பஹல்காம் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்ற பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு உயிா்த்தியாகம் செய்த உள்ளூா் இளைஞா் அடில் ஹுசைன் ஷாவின் மனைவிக்கு அரசுப் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் ஹபாத்நாா் ப... மேலும் பார்க்க

வரும் டிசம்பரில் முழு சோதனைக்கு உள்படுத்தப்பட இருந்த விபத்துக்குள்ளான விமானம்!

அகமதாபாதில் விபத்துக்குள்ளான ஏா் இந்தியாவின் ‘போயிங் 787-8 ட்ரீம்லைனா்’ விமானத்தின்அடுத்த முழு சோதனை கடந்த 2023-ஆம் ஆண்டு, ஜூன் மாதத்துக்குப் பிறகு வரும் டிசம்பரில் திட்டமிடப்பட்டிருந்தது என்று விமான ... மேலும் பார்க்க