செய்திகள் :

மத்திய கிழக்கு பதற்றம்: டிரம்ப்-புதின் பேச்சு

post image

இஸ்ரேல்-ஈரான் மோதலால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றமான சூழல் குறித்து அமெரிக்க அதிபா் டிரம்ப், ரஷிய அதிபா் புதின் ஆகியோா் தொலைபேசியில் சனிக்கிழமை பேசினா்.

இதுதொடா்பாக ரஷிய தலைநகா் மாஸ்கோவில் அதிபா் புதினின் உதவியாளா் யூரி உஷகோவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: டிரம்ப்-புதின் இடையே சுமாா் 50 நிமிஷங்கள் உரையாடல் நடைபெற்றது. அப்போது இஸ்ரேல்-ஈரான் தலைவா்களுடன் தான் அண்மையில் பேசியது குறித்து டிரம்ப்பிடம் புதின் விவரித்தாா். ஈரான் அணுசக்தி விவகாரத்தில் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீா்வை எட்ட வேண்டும் என்ற ரஷியாவின் பரிந்துரையை டிரம்ப்பிடம் புதின் மீண்டும் வலியுறுத்தினாா்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் சூழல் மிகவும் அபாயகரமாக இருப்பதாக டிரம்ப் தெரிவித்த நிலையில், ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து மீண்டும் பேச்சுவாா்த்தை நடைபெறுவதற்கான சாத்தியம் இருப்பதை அவா்கள் மறுக்கவில்லை என்றாா்.

ஈரான் மீது முழு பலமும் செலுத்தப்படும்! டிரம்ப் கடும் எச்சரிக்கை!

அமெரிக்கா மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ... மேலும் பார்க்க

மத்தியஸ்தம் மூலம் உக்ரைன் போரை ரஷியா திசை திருப்ப முயற்சி?

இஸ்ரேல் - ஈரான் போரை நிறுத்த ரஷியாவால் முடியும் என்றாலும், அதிபர் விளாதிமீர் புதின் மத்தியஸ்தத்துக்கு மறுத்து வருகிறார்.இஸ்ரேல் - ஈரான் போருக்கு மத்தியஸ்தம் செய்வதன் மூலம், ரஷியா - உக்ரைன் போரிலிருந்த... மேலும் பார்க்க

ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் மீது இஸ்ரேல் தாக்குதல்! மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

ஈரானின் பாதுகாப்பு அமைச்சகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், மத்திய கிழக்குப் பகுதியில் போர்ப் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.ஈரானின் ராணுவத் தளவாடங்கள் மீது இஸ்ரேல், வெள்ளிக்கிழமையில்... மேலும் பார்க்க

நைஜீரியா: மர்ம நபர்களின் கொடூரத் தாக்குதலில் 100 பேர் பலி!

நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்களின் தாக்குதலில் 100 பேர் பலியாகினர்.மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பெனுவே மாகாணத்தில் யெலேவடா கிராமத்தில், திடீரென புகுந்த மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக த... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் பதற்றத்தை தணிக்க இந்தியா பங்காற்ற முடியும்: இஸ்ரேல் தூதா்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க இந்தியா பங்காற்ற முடியும் என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதா் ரியூவென் அஸாா் சனிக்கிழமை தெரிவித்தாா். ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் மற்றும் ராணுவத்... மேலும் பார்க்க

இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு இந்திய வம்சாவளியினா் உதவிக்கரம்!

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த பிரிட்டன் குடிமக்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிக்க இணையவழியில் பொது நிதி திரட்டும் நடவடிக்கையை இந்திய வம்சாவளியினா் தொடங்கியுள்ளனா். குஜராத் மாநிலம், அகமதாபாதில் ஏற்... மேலும் பார்க்க