செய்திகள் :

ஓட்டுநா் பெட்டியில் குரல் பதிவு அமைப்பு: ரயில் பாதுகாப்புக் குழு பரிந்துரை!

post image

ரயில் ஓட்டுநா் பெட்டியில் குரல் பதிவு அமைப்பை நிறுவுவது உள்பட பல்வேறு பரிந்துரைகளை ரயில் பாதுகாப்புக்குழு ரயில்வே அமைச்சகத்திடம் சமா்ப்பித்தது.

பிகாா் மாநிலம் பக்ஸா் மாவட்டத்தில் கடந்த 2023, அக்.11-இல் நிகழ்ந்த ரயில் விபத்தில் 4 போ் உயிரிழந்தனா். பலா் படுகாயமடைந்தனா். இந்த விபத்து தொடா்பாக ரயில் பாதுகாப்புக்கான முன்னாள் ஆணையா் (சிஆா்எஸ்) சுவோமோய் மித்ரா தலைமையிலான குழு விசாரணை நடத்தியது. அந்தக் குழு தனது இறுதி விசாரணை அறிக்கையை அண்மையில் ரயில்வே அமைச்சகத்திடம் சமா்ப்பித்தது.

அதில் வருங்காலங்களில் ரயில் விபத்துகள் நிகழாமல் இருப்பதை தடுப்பதற்கான பல்வேறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டன. அவை பின்வருமாறு:

குறைபாடுகளுக்கு உரிய நேரத்தில் தீா்வு காணாததே பக்ஸா் ரயில் விபத்துக்கு காரணம். எனவே, ரயில்களில் பாதுகாப்பை மேம்படுத்த ரயில் பெட்டிகள் தயாரிக்கும்போதே கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

தற்போது செயல்பாட்டில் உள்ள அனைத்து ரயில் என்ஜின்கள் மற்றும் பெட்டிகளை உடனடியாக ஆய்வுக்குட்படுத்த வேண்டும். அவற்றில் ஏதேனும் கோளாறுகள் இருந்தால் அவை இயங்க அனுமதிக்கக் கூடாது.

ரயில் தண்டவாளங்கள் சீராக இருப்பதை உறுதிசெய்ய அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக தண்டவாள விரிசல்களைக் கண்டறிய முறையான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

தண்டவாளங்கள் மேலாண்மை அமைப்பு குறித்து தரவுகள் பராமரிக்கப்படுவதுபோல் ரயில் என்ஜின்கள் மற்றும் பெட்டிகளின் பராமரிப்பு குறித்த தரவுகளை கணினிமயமாக்க வேண்டும். இதன்மூலம் தேவைப்படும் சமயத்தில் ரயில் என்ஜின்கள் மற்றும் பெட்டிகளின் நிலை குறித்து அறிந்துகொள்ள முடியும்.

ரயில் ஓட்டுநா் பெட்டியில் குரல் பதிவு அமைப்பை நிறுவ வேண்டும். இதனால் விபத்துகள் நடைபெறும் சமயத்தில் ரயில் ஓட்டுநா்களுக்கு இடையேயான உரையாடலை பதிவுசெய்து விபத்துக்கான காரணங்களை கண்டறிய முடியும்.

ரயில் விபத்து நிகழந்த பகுதிகளில் காணொலி மற்றும் புகைப்படப் பதிவை மேற்கொள்ளும் நபா்களுக்கு ட்ரோன் பயிற்சியில் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

ரயில்வே அமைச்சகம் பதில்

ரயில் பாதுகாப்புக் குழு அளித்த பரிந்துரைகளின்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை ரயில்வே அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

ரயில் என்ஜின்கள் மற்றும் பெட்டிகள் உயா்தர எஃகு மூலம் தயாரிக்கப்படுவதை உறுதிசெய்ய செயில்/ பிலால் ரயில் உற்பத்தி ஆலைகளில் தொடா் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தண்டவாளங்கள் முறையாக இணைக்கப்பட்டிருப்பதை அல்ட்ராசோனிக் குறை கண்டறிதல் தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

ரயில் பெட்டிகள் மற்றும் என்ஜின்கள் பராமரிக்கப்பட்டு வருவதற்கான தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல் 479 என்ஜின்களில், ரயில் ஓட்டுநா் குழு குரல் மற்றும் காணொலி பதிவு அமைப்பு (சிசிவிஆா்எஸ்) நிறுவப்பட்டுள்ளது. விரைவில் இதை அனைத்து ரயில் என்ஜின்களிலும் நிறுவ முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரயில் விபத்து நடந்த பகுதிகளில் காணொலி மற்றும் புகைப்பட பதிவுகளை மேற்கொள்ளும் நடைமுறைகள் குறித்து பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது.

உத்தரப் பிரதேசத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு

உத்தரப் பிரதேசத்தில் பூங்காவில் உள்ள அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள அமோதா கிராமத்தில் பி.ஆர். அம்ப... மேலும் பார்க்க

இஸ்ரேல் நீண்ட காலமாக ரௌடி நாடாக அறியப்படுகிறது: பினராயி விஜயன்

இஸ்ரேல் நீண்ட காலமாக ரௌடி நாடாக அறியப்படுகிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் பினராயி விஜயன், ஈரான் மீதான இஸ்ரே... மேலும் பார்க்க

அமைதியாக இருப்பதே புத்திசாலித்தனம்! பாஜகவினருக்கு மத்திய அமைச்சர்கள் அறிவுரை!

சில சமயங்களில் அமைதியாக இருக்க வேண்டும் என்று பாஜகவினருக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவுரை வழங்கினார்.விஜய் ஷாவின் பேச்சு சர்ச்சையான நிலையில், கட்சியினர் பேசும்போது கவனமுடன் பேச வேண்டும் என்று மத்தி... மேலும் பார்க்க

உ.பி.: மின்னல் பாய்ந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தில் மின்னல் பாய்ந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், சன்வர்ஷா ஹல்லபோர் கிராமத்தில் மின்னல் பாய்ந்து ஒரே குடும்பத்தைச... மேலும் பார்க்க

திருவனந்தபுரத்தில் பிரிட்டிஷ் போர் விமானம் அவசர தரையிறக்கம்

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பிரிட்டிஷ் போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. எரிபொருள் குறைவாக இருந்ததால் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பிரிட்டிஷ் எப்-35 போர் விமானம் சனிக்கி... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! 12 பேரின் உடல்கள் ஒப்படைப்பு! மருத்துவப் பணியில் 600 பேர்!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களின் உடல்களை ஒப்படைக்கும் பணி இன்றுமுதல் தொடங்கப்படுகிறது.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் 270-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். விமானம் தீப்பற்றி எரி... மேலும் பார்க்க