செய்திகள் :

406 ராணுவ அதிகாரிப் பணிக்கான என்டிஏ தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

post image

இந்தியா ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகளில் காலியாக உள்ள 406 அதிகாரி காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான என்டிஏ தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான திருமணமாகாத ஆண், பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்வு எண். 10 / 2025 -NDA-II

தேர்வின் பெயர்: National Defense Academy & Naval Academy Examination - I (2025)

காலியிடங்கள்: 406

1. Army - 208

2. Navy - 42

3. Air Force - 120

4. Navel Academy - 36

வயது வரம்பு: 1.1.2007-க்கும் 1.1.2010-க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.

தகுதி: National Defense Academy பணிக்கு ஏதாவதொரு பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . Navy Airforce பணிக்கு Physics மற்றும் Mathematics-ஐ ஒரு பாடமாகக் கொண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் எஸ்எஸ்பி நடத்தும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வில் Mathematics General Ability Test பாடப்பிரிவுகளிலிருந்து கொள்குறி வகையில் கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு தவறான பதில்களுக்கும் மதிப் பெண்கள் குறைக்கப்படும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 14.09.2025

இடங்கள்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர், புதுச்சேரி.

எழுத்துத்தேர்வு முடிவுகள் மத்திய பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.

எஸ்எஸ்பி நேர்முகத்தேர்வு நடைபெறும் மாதம்: ஜனவரி - 2026.

எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு இந்திய ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 3 ஆண்டு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் போது உதவித்தொகையாக மாதம் ரூ.56,100 வழங்கப்படும். பின்னர் அதிகாரிப் பணியுடன் மாதம் ரூ.56,100 - 1,77,500 சம்பளமாக வழங்கப்படும்.

பயிற்சி ஆரம்பமாகும் மாதம்: 2026

விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய உடற்தகுதி, மருத்துவத் தகுதி மற்றும் எழுத்துத்தேர்வுக்கான பாடத்திட டம் பற்றிய முழுவிபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.upsconline.nic.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண் டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 17.06.2025

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

மிஸ்பண்ணிடாதீங்க... 14,582 குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

மிஸ்பண்ணிடாதீங்க... 14,582 குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

மத்திய அரசின் வேலைவாய்ப்பு அறிவிப்புக்காக காத்திருந்த பட்டதாரி இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ள 14,582 குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பணியிடங்களுக்கான... மேலும் பார்க்க

வெளிநாட்டில் வேலை வேண்டுமா..?: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

மலேசிய நாட்டில் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் க்யூசி இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்... மேலும் பார்க்க

எஸ்.ஐ. தோ்வு தள்ளிவைப்பு

சென்னை: ஜூன் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்த காவல் உதவி ஆய்வாளா் (எஸ்ஐ), சிறப்பு உதவி ஆய்வாளருக்கான (எஸ்.எஸ்.ஐ) தோ்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் அறிவ... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

சென்னை: தமிழகத்தில் நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) நடத்தப்படவுள்ள குரூ... மேலும் பார்க்க

கார்டன் ரீச் கப்பல் கட்டும் தொழிற்சாலையில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

கொல்கத்தாவில் உள்ள இந்தியாவின் முன்னணி பாதுகாப்பு கப்பல் கட்டும் தளம் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் மற்றும் இன்ஜினியர்ஸ் லிமிடெட் நிறுவனம். இது முதன்மையாக இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படையின... மேலும் பார்க்க

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம், தேனி, உடுமலைப் பேட்டை ஆகிய இடங்களில் உள்ள தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழக கல்லூரிகளில் உதவி பேராசிரியர், உதவி நூலகர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுக... மேலும் பார்க்க