செய்திகள் :

மிஸ்பண்ணிடாதீங்க... 14,582 குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

post image

மத்திய அரசின் வேலைவாய்ப்பு அறிவிப்புக்காக காத்திருந்த பட்டதாரி இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ள 14,582 குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம்(எஸ்எஸ்சி) ஜூன் 9 ஆம் தேதி வெளியிட்டுள்ளது. இதற்கு ஆர்வமுள்ள பட்டதாரி இளைஞர்களிடம் ஜூலை 4 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பர எண்.HQ-C11018/1/2025-C-1

தேர்வு: SSC- Combined Graduate Level Exam - 2025

குரூப் ‘பி’ பதவிகள்

பதவி: Assistant Section Officer, Assistant / Assistant Section Officer, Inspector of Income Tax, Inspector,(Central Excise), Inspector (Preventive Officer), Inspector (Examiner), Assistant Enforcement Officer, Sub Inspector CBI, Inspector, Section Head

சம்பளம்: மாதம் ரூ. 44,900 - 1,42,400

பதவி: Assistant / Assistant Section Officer, Executive Assistant, Research Assistant, Divisional Accountant, Sub Inspector, Sub-Inspector/Junior Intelligence Officer, Junior Statistical Officer, Statistical Investigator Grade-II, Office Superintendent.

சம்பளம்: மாதம் ரூ. 35,400 - 1,12, 400

குரூப் ‘பி’ பதவிகள்

பதவி: Assistant / Assistant Section Officer, Executive Assistant, Research Assistant, Divisional Accountant, Sub Inspector, Sub-Inspector/ Junior Intelligence Officer, Junior Statistical Officer

சம்பளம்: மாதம் ரூ. 35,400 - 1,12,400

வெளிநாட்டில் வேலை வேண்டுமா..?: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

குரூப் ‘சி’ பதவிகள்

பதவி: Auditor, Accountant, Accountant/ Junior Accountant

சம்பளம்: மாதம் ரூ. 29,200 - 92,300

பதவி: Postal Assistant/ Sorting Assistant, Senior Secretariat Assistant/ Upper Division Clerks, Senior Administrative Assistant, Tax Assistant, Sub-Inspector

சம்பளம்: மாதம் ரூ. 25,500 - 81,100

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில குறிப்பிட்ட பதவிகளுக்கு கூடுதல் தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: 1.8.2025 தேதியின்படி கணக்கிடப்படும். அரசுவிதிகளின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் , மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: தேர்வானது முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். முதல் நிலை தேர்வானது கணினி வழித் தேர்வு மூலம் நடத்தப்படும். அதில் தேர்வானவர்களுக்கு முதன்மைத் தேர்வானது எழுத்துத் தேர்வு முறையில் நடத்தப்படும். சில பதவிகளுக்கு கூடுதல் தகுதித் தேர்வும் நடத்தப்படும்.

முதல்நிலைத் தேர்வு 200 மதிப்பெண்கள் கொண்டது. இதில் General Intelligence and Reasoning, General Awareness, Quantitative Aptitude, English Comprehension ஆகிய பகுதிகளில் இருந்து தலா 25 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும். இதற்கான தேர்வு கால அளவு 1 மணி நேரம். இதில் தகுதி பெறுபவர்கள் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

முதன்மைத் தேர்வு 390 மதிப்பெண்கள் கொண்டது. இதில் Mathematical Abilities மற்றும் Reasoning and General Intelligence பிரிவில் தலா 30 கேள்விகளும், English Language and Comprehension பிரிவில் 45 கேள்விகளும், General Awareness பிரிவில் 25 கேள்விகள் என 130 கேள்விகள் கேட்கப்படும். Computer Knowledge பிரிவில் 20 கேள்விகள் கேட்கப்படும். அதன்பின்னர் தட்டச்சு தேர்வு நடைபெறும்.

இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் பதவிகளுக்கான உடற்தகுதி மற்றும் உடற்திறன் தகுதியை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

முதற்கட்ட தேர்வு நடைபெறும் மாதம் : ஆகஸ்ட் - 2025

இரண்டாம் கட்ட தேர்வு நடைபெறும் மாதம்: டிசம்பர் 2025

தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, சேலம், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் புதுச்சேரி,

விண்ணப்பிக்கும் முறை: https://ssc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100. இதில் எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 4.7.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

வெளிநாட்டில் வேலை வேண்டுமா..?: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

வெளிநாட்டில் வேலை வேண்டுமா..?: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

மலேசிய நாட்டில் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் க்யூசி இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்... மேலும் பார்க்க

எஸ்.ஐ. தோ்வு தள்ளிவைப்பு

சென்னை: ஜூன் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்த காவல் உதவி ஆய்வாளா் (எஸ்ஐ), சிறப்பு உதவி ஆய்வாளருக்கான (எஸ்.எஸ்.ஐ) தோ்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் அறிவ... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

சென்னை: தமிழகத்தில் நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) நடத்தப்படவுள்ள குரூ... மேலும் பார்க்க

கார்டன் ரீச் கப்பல் கட்டும் தொழிற்சாலையில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

கொல்கத்தாவில் உள்ள இந்தியாவின் முன்னணி பாதுகாப்பு கப்பல் கட்டும் தளம் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் மற்றும் இன்ஜினியர்ஸ் லிமிடெட் நிறுவனம். இது முதன்மையாக இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படையின... மேலும் பார்க்க

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம், தேனி, உடுமலைப் பேட்டை ஆகிய இடங்களில் உள்ள தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழக கல்லூரிகளில் உதவி பேராசிரியர், உதவி நூலகர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுக... மேலும் பார்க்க

காரைக்குடி மின்வேதியியல் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி..?

காரைக்குடியில் செயல்பட்டுவரும் மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிப்பு எண்.PS-04/2025பணி: Project Associ... மேலும் பார்க்க