செய்திகள் :

ஆபரேஷன் ரைசிங் லயன்: ஈரானில் புதிய ராணுவ தளபதிகள் நியமனம்!

post image

இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் ராணுவப்படைகளின் தளபதிகளுக்கு பதிலாக, புதிய தளபதிகளை நியமித்து அந்நாட்டு உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமேனி உத்தரவிட்டுள்ளார்.

ஆபரேஷன் ரைஸிங் லயன் என்ற பெயரில் ஈரான் தலைநகர் தெஹ்ரானிலுள்ள ராணுவ தளவாடங்கள், அணுசக்தி நிலையங்கள், ராணுவ அலுவலகங்கள் உள்ளிட்டவை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது.

இந்தத் தாக்குதலில், ஈரானின் முப்படை தலைமைத் தளபதி ஜெனரல். முஹம்மது பகேரி, இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தளபதி ஜெனரல். ஹொசைன் சலாமி உள்ளிட்ட முக்கிய ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், கொல்லப்பட்ட தளபதிகளுக்கு பதிலாக புதிய தளபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஈரானின் முப்படைகளின் தலைமைத் தளபதியாக ஜெனரல். அப்தொல்ரஹிம் மௌசவி என்பவரும், இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் தலைவராக முஹம்மது பக்போர் என்பவரையும் அந்நாட்டு உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமேனி நியமித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களுக்கு ஈரான் எப்போது வேண்டுமானாலும் பதிலடி கொடுக்கக் கூடும் எனும் சூழல் நிலவி வருவதால், இஸ்ரேல் நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 1979-ம் ஆண்டு நடைபெற்ற இஸ்லாமிய புரட்சியின்போது ஈரானின் புரட்சிகர காவல் படையானது உருவாக்கப்பட்டது. இது, ஈரானின் சக்திவாய்ந்த ஆயுதப்படைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு!

ரவீந்திரநாத் தாகூரின் பூா்விக வீடு சேதம்: 5 போ் கைது

வங்கேதசத்தில் கவிஞா் ரவீந்திரநாத் தாகூரின் பூா்விக வீடு மற்றும் அதில் அமைந்துள்ள தாகூா் அருங்காட்சியகம் மீது தாக்குதல் நடத்தியது தொடா்பாக 5 பேரை அந்நாட்டு காவல் துறையினா் கைது செய்துள்ளனா். இந்தியா, வ... மேலும் பார்க்க

ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி: 16 ஏா் இந்தியா விமானங்கள் திருப்பிவிடப்பட்டன

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் காரணமாக 16 விமானங்கள் திருப்பிவிடப்பட்டதாக ஏா் இந்தியா நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. இஸ்ரேல் தாக்குதல் காரணமாக வான் எல்லை மூடப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கையை... மேலும் பார்க்க

எதில் போய் முடியும் இஸ்ரேல்-ஈரான் மோதல்?

‘ஆப்பரேஷன் ரைஸிங் லயன்’ ஈரான் மீது வெள்ளிக்கிழமை அதிகாலை தொடங்கிய தாக்குதல் நடவடிக்கைக்கு இஸ்ரேல் வைத்துள்ள பெயா் இது. நீண்ட நேரம் பதுங்கியிருந்து இரையைப் பிடிப்பதற்காக எழுந்து பாயும் சிங்கத்தைப் போல,... மேலும் பார்க்க

ஈரானின் அணுசக்தி, ராணுவ மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: முக்கியத் தளபதிகள் உயிரிழப்பு

ஈரானின் அணுசக்தி, ராணுவ மையங்கள் மீது இஸ்ரேல் வெள்ளிக்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தியது. ‘ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் மீதான இஸ்ரேல் தாக்குதலால் அபாயகரமான அளவுக்கு அணுக் கதிா்வீச்சு ஏற்படவில்லை’ என்... மேலும் பார்க்க

கிரீஸ்: புராதன துறவி மடம் நிலநடுக்கத்தில் சேதம்

கிரீஸில் ஏற்பட்ட தொடா் நிலநடுக்கம் காரணமாக அந்த நாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த துறவி மடம் சேதமடைந்தது. மவுன்ட் அதாஸ் தீபகற்பகத்தில் இந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கம் ர... மேலும் பார்க்க

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: பிரதமா் மோடி, உலக நாடுகளின் தலைவா்களுடன் நெதன்யாகு பேச்சு

ஈரானுக்கு எதிரான தாக்குதலுக்கு சா்வதேச ஆதரவைப் பெறும் முயற்சியாக பிரதமா் நரேந்திர மோடி உள்பட பல்வேறு உலகத் தலைவா்களை இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசி மூலம் தொடா்புகொண்டு பேசியதாக அவரின் அல... மேலும் பார்க்க