செய்திகள் :

ஒரு நாள்தான்... அவள் வீட்டுக்கு வந்துவிடுவாள்: விமானப் பணிப்பெண் தாய்

post image

ஒட்டுமொத்த நாடே, விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களை நினைத்து வருந்திக் கொண்டிருக்கும் வேளையில், தனது மகள் வந்துவிடுவாள் என நம்பிக்கையோடு இருக்கிறார் விமானப் பணிப்பெண் சைனீதாவின் தாய்.

ஏர் இந்தியா விமான விபத்து நேரிட்ட இடத்தில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விமானத்தில் பயணித்த 241 பேர் பலியான நிலையில், விமானம் விழுந்த இடத்தில் இருந்தவர்களும் பலியாகியிருக்கிறார்கள்.

ஏர் இந்தியா விமானத்தின் பணிப்பெண்ணாக இருந்த மும்பையைச் சேர்ந்த சைனீதாவும் இந்த விபத்தில் பலியாகியிருக்கிறார்.

மும்பையில், அவரது தாய் மற்றும் தந்தையால், பணிக்குச் சென்ற மகள் திரும்ப வரமாட்டாள் என்ற உண்மையை ஏற்க முடியாமல் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு உறவினர்களும் நண்பர்களும் எவ்வளவோ ஆறுதல் சொன்னாலும் ஏற்பதற்கில்லை.

ஆறுதல் சொல்ல வருவோரிடமெல்லாமல், ஒரே ஒரு நாள் விட்டுவிடுங்கள். அவள் வீட்டுக்கு வந்துவிடுவாள் பாருங்கள் என வீட்டின் கதவைப் பார்த்தபடியே இருக்கிறார் சைனீதாவின் தாய்.

தனது பெண்ணின் குழந்தைப் பருவ சுட்டித்தனங்கள் குறித்துச் சொல்லி சொல்லி மாய்கிறார். அவரது நம்பிக்கையைக் கெடுக்க விரும்பாத உறவினர்கள், செய்வதறியதாது தவித்து வருகிறார்கள்.

ஃபரீதாபாத்: 2 சிறுவா்களைக் கடத்திய நபா் கைது

ஃபரீதாபாத்தில் இரண்டு சிறுவா்களைக் கடத்திச் சென்று அவா்களது குடும்பத்தினரிடம் ரூ.30,000 கப்பம் கேட்ட நபரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா். இது குறித்து ஃபரீதாபாத் காவல் துறை செய்தித் தொடா்பாளா் வெள்... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: எதிர்காலத்தில் தவறுகள் நிகழாமலிருக்க உரிய நடவடிக்கைகள் தேவை -பிரியங்கா

வயநாடு: அகமதாபாத் விமான விபத்து குறித்து பேசியுள்ள காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி எதிர்காலத்தில் தவறுகள் நிகழக் கூடாது என்று தெரிவித்தார். இந்த நிலையில், வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினரான பிரியங்கா... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசம்: என்கவுன்டரில் 4 நக்சல்கள் சுட்டுக்கொலை

மத்தியப் பிரதேசத்தில், பாலகாட் மாவட்டத்தில் உள்ள பச்சாமா தாதர் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே நடந்த மோதலில் 3 பெண்கள் உள்பட நான்கு நக்சல்கள் கொல்லப்பட்டனர்.பாலகாட் காவல் க... மேலும் பார்க்க

கர்நாடகம்: பைக் டாக்ஸி சேவைகள் அனைத்தும் நிறுத்தம் - ஜூன் 16முதல் இயங்காது!

பெங்களூரு: பெங்களூரு உள்பட கர்நாடகம் முழுவதும் பைக் டாக்ஸிகள் இனி இயங்காது. அம்மாநிலத்தில் பைக் டாக்ஸிகள் இயக்க விதிக்கப்பட்ட தடை உத்தரவு நாளை(ஜூன் 15) நள்ளிரவுமுதல் அமலாகிறது. நாடெங்கிலும் பைக் டாக்ஸ... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும்

அகமதாபாத் விமான விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தை காங்கிரஸ்... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! களத்தில் பிரிட்டன் விசாரணைக் குழு!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணையில் பிரிட்டன் நாட்டு விசாரணைக் குழுவும் இடம்பெறுவதாக அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்தார்.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் 245 பேர் ... மேலும் பார்க்க