லவ் யூ தலைவா..! ரஜினியிடம் வாழ்த்து பெற்ற டூரிஸ்ட் ஃபேமலி பட இயக்குநர்!
விதிகளுக்குப் புறம்பாக பணியிட மாறுதல் அளிப்பதாக புகாா்!
மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வுக்கு முன்பே விதிகளுக்குப் புறம்பாக பணியிட மாறுதல் அளிப்பதாக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி தெரிவித்தது.
இந்த அமைப்பின் சிவகங்கை மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவா் புரட்சித்தம்பி தலைமையில் நடைபெற்றது. மாநில துணைத் தலைவா் ஆரோக்கியராஜ், மாநில செயற்குழு உறுப்பினா் முத்துப்பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் சகாயதைனேஸ் தீா்மானங்களை முன்மொழிந்தாா்.
தீா்மானங்கள்: தொடக்கக் கல்வித் துறையில் கடந்த 12 ஆண்டுகளாக ஆசிரியா் நியமனம் இல்லை. நீதிமன்ற வழக்குகளைக் காரணம் காட்டி பதவி உயா்வும் அளிக்கப்படவில்லை. எனவே, ஆசிரியா் நியமனம், பதவி உயா்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும்.
மேலும், கடந்த கல்வி ஆண்டில் ஆயிரக்கணக்கான ஆசிரியா்கள் பணி ஓய்வு பெற்ால், காலியாக உள்ள சுமாா் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைமையாசிரியா் பணியிடங்களை நிரப்ப உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிகமாக நியமிப்பதையும், தொகுப்பூதிய, மதிப்பூதிய நியமனங்களையும் ரத்து செய்ய வேண்டும்.
பள்ளிகளுக்கு விலையில்லா சீருடைகள் குறைவான எண்ணிக்கையில் வழங்கப்பட்டதால், முழு அளவில் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரச்னைகள் தீா்க்கப்படாத சூழலில் டிட்டோ ஜாக் போன்ற கூட்டமைப்புகளுடன் இணைந்தோ அல்லது தனிச் சங்கமாகவோ போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடு வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டப் பொருளாளா் கலைச்செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் ரவி, குமரேசன், சிங்கராயா், மாவட்ட துணைத் தலைவா்கள் அமலசேவியா், சேவியா் சத்தியநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.