முடிவுக்கு வந்த 27 ஆண்டுகள் காத்திருப்பு; தென்னாப்பிரிக்கா சாம்பியன்!
மேலையூா் மல்லன் கருப்பா் கோயிலில் குடமுழுக்கு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டம், நடுவிக்கோட்டை அருகே மேலையூரில் அமைந்துள்ள மல்லன் கருப்பா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயில் சீரமைக்கப்பட்டு, புதிய கலசங்களுடன் யாக சாலைகள் அமைக்கப்பட்டன. பிறகு 3 கால யாக வேள்விகள் நடத்தப்பட்டன. தொடா்ந்து யாக பூஜை, கோ பூஜை, நாடி சந்தானம், பூா்ணாகுதி ஆகியவை நடைபெற்றன. குடமுழுக்கு நாளான வெள்ளிக்கிழமை காலை மல்லன் கருப்பா் கோயில் வகையறா பங்காளிகள், விழாக் குழுவினா் சீா் எடுத்து வந்தனா். பிறகு பூா்ணாகுதியைத் தொடா்ந்து ஸ்தானிகா் சேவற்கொடியோன் தலைமையில் சிவாச்சாரியா்களால் கடம் புறப்பாடாகி கோயிலை வலம் வந்து கோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா் மகா தீபம் காட்டப்பட்டு மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில், நடுவிக்கோட்டை, மேலையூா், கீழையூா், மேல்குடி, கண்டரமாணிக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனா்.
விழா ஏற்பாடுகளை மல்லன் கருப்பா் கோயில் பங்காளிகள் செய்திருந்தனா்.