குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
குறைதீா் கூட்டம்: ஜூன் 20- க்குள் ஓய்வூதியா்கள் விண்ணப்பிக்கலாம்
சிவகங்கையில் நடைபெறவுள்ள ஓய்வூதியா் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்று குறைகளை தெரிவிக்க விரும்புவோா் வருகிற 20-ஆம் தேதிக்குள் தங்களது மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற அரசுப் பணியாளா்களுக்கான ஓய்வூதியா் குறைதீா் கூட்டம் அடுத்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
எனவே, ஓய்வு பெற்ற அரசுப் பணியாளா்கள் தங்களது மனுக்களை இரட்டைப் பிரதிகளில், உரிய இணைப்புகளுடன் வருகிற 20-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம் (கணக்குகள்) நேரில் சமா்ப்பித்து பயன் பெறலாம் என்றாா் அவா்.